Friday 24 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 அன்பின் கைகளின் 

வட்டதிற்க்கைள் கொஞ்சும் கிளி

ஆகாய மேகத்தை கயிராக்கி

வானவில் வளைவில் 

ஊஞ்சல் கட்டி அச்சமின்றி

ஆடினாள் கொஞ்சம் கூட பயமற்று

தென்றல் கவியில் 

கண்கள் நனைய

கொஞ்சம் பார்த்தே 

வெண்ணிலா தேய

கொஞ்சம் கொஞ்சமாய. 

கொஞ்சுமொழி

கோவையிதழ் சுவையானது 

இவள் கொஞ்சிபேசுபோது

இவள் கற்பனை தோட்டமெங்கும்

எட்டி நின்ற எட்ட பார்த்த 

விழிகள்  ஏங்க 

இவள் கற்தரையின் கற்பனை 

கனவுக்குள் கைகள் தந்த 

நம்பிக்கையில் பூவாய் மலர்ந்தாள்

அச்சச்சோ!!யார் கண்பட்டதே

அச்சமில்ல கிளி ஊமையாக 

மிஞ்சமிதி  தெரியா அறியா கதை 

கற்பனையில் முடிந்திட 

நம்பிக்கையிழந்த கிளியே 

கூண்டுக்கிளியானது!!!

 



No comments: