Saturday 18 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 நான் மூடி வைத்த

புத்தகத்திற்க்குள் எந்த

மயிலிறகையும் வைத்து 

காத்திருக்கவில்லை  !!!

என் கனவிற்க்குள் எந்த

உணர்வையும்  பூட்டி வைத்து

காத்திருக்கவில்லை !!!

என் கற்பனைகள் வரையபட்டால்

அங்கே சிலையாய்  நான்

நிற்பதுமில்லை!!!!

என்னுடன் நடக்க இதுவரை யாரும்

கால்களாய் மாறி  என்னேட

நம்பிக்கையாய்  தடந்ததுமில்லை!!!

என் தூரத்தின்  விடுதலைக்கு

மரணத்தின் முடிவை மட்டுமே

இறைவள் மகிழ்ச்சியின் 

தொடக்கமென்றான்!!!

காத்திருக்கின்றேன் பூக்களை மட்டுமே

சொந்தமாய் வைத்துக்கொண்டு

இறுதியில் எனக்காய் எடுத்துசொன்றிட…,


No comments: