உன்னை புரிந்தும் புரியாமலும்
ஓரு பாதை
உன்னை அறிந்தும் அறியாமலும்
ஒரு பயணம்
உன்னை தேடியும் தேடாமலும்
ஒரு வாழ்க்கை ! இருந்தும்
யாரே வட்டத்திற்க்குள்
இட்டு ஒடச்சொன்னதைப்போல்
திரும்பும் திசையெங்கும் நீயாகின்றாய்
பூட்டிய கதவினை திறக்கவில்லை
அணைந்த தீபத்தை ஏற்றவில்லை
இருந்தும் என் இருளுக்குள்
ஓரு நிலவாக என்னேடு
நீயே நிழலாய் உணர்கின்றேன்!!!
எப்பவும் போல் புரியாக்குழந்தையாய்
அறியா நீயாய் தனியாய நானாய்
தொடர்பிற்கு அப்பாலே தோடர்கின்றது
வாழ்க்கை!!!!
No comments:
Post a Comment