Wednesday 15 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 பெண்ணின் தன்நம்பிக்கையே

ஆண்மை வெறுக்கின்றது

 தன்னை  சார்த்தே 

வாழவேண்டும் என்பதால்

தன் தவறை  சிந்திக்காமலே

பெண்மையை  குற்றவாளியாக்கின்றது

பெண்மை  !!

 அடைக்கபட்ட கூண்டே

பெண்மை சிந்திக்கா 

சாவியானதால்!

பெண்மைக்கு இன்னும்  பெண்மையை 

 நேசிக்க தெரியவில்லை  

இழந்தவள் பலர் முன் 

பரிதாவ  கண்ணீராய்

மட்டும் பார்க்கும்  பெண்மைக்கு  

புரிவதில்லை !

வலிகளை  சுமக்கும்  பெண்மைக்கு 

தானே காப்புயென்பதை

புரிந்தாலே போதும்

ஆண்மையின் தாய்மை

மரணிக்காமல் வாழும்!!!!


No comments: