அர்ச்சனைத்தட்டுக்குள்
அவள் மங்களத்தை ஏந்தி
கோயில் சென்றால் அமங்களமாய்
அர்ச்சகர் அர்ச்சனை செய்தபின்
சுமங்கலியாய் வாழ
வாழ்த்தி குங்கும்ம் பூகொடுத்தார்
கையில்
கையில் வந்த மங்களத்தின்
வார்த்தை கேட்டு
இறைவனேடு புன்னகைத்தாள்
யாரும் அறிந்தாடா கண்ணீர்த்துளியை
மறைத்தபடி இதை
பார்த்த அர்ச்சகர்
ஆச்சரியத்தேடு அவளை பார்க்க
அதனை இறைவன் சன்நியிலே
வைத்து விட்டு திரும்பி நடந்தாள்
எப்பவும் போல் இயல்பாய்
கொடுத்தவர் புரிந்தது போல்
இக்காலத்தில் இதையெல்லாம்
நினைத்து நடக்காதே
உனக்கு பிடித்தால்
வைத்துகொள் என்றார்
அவரையும் பார்த்து புன்னகைத்திட்டு
என் உணர்வுகள் இழந்ததை
பொய்யாக வைத்தே
நடித்திட முடியாமலேயே
உண்மையாய்
இறைவன் தந்தை ஏற்றேன்
என்றால்
எனக்கான வாழ்வில்
பெய்யான முகங்களில்
உண்மையான என்னை
தேடிவாழ்க்கின்றேன்
என்று சொல்லிபடி
புன்னகையேடு இன்னும்
மாற்றம் உடலில் தான் மனித
மனதிற்குள் இல்லையென
எண்ணியபடி நடந்நாள் !!!
No comments:
Post a Comment