என் கனவுகளில் கைதொட்டு
என் சகற்பனையின்
வடிவத்தில் பூத்த பூ.
அவள்
என் ஆசைகளின்
கற்பனையை தோற்கடித்த
கவிதையவள்
என் கைபட்டுக்கருகிபோன
மலர் வாசம் செய்யும்
கல்லறை அவள்
நான்
பேசும் மொழியின்
காதல் மொழியவள்
என்
தனிமைக்குள்
வாழும் துணையவள்
என்
மௌனத்தை உடைக்கும்
இசையின் வடிவம்
அவள்
என் துயரங்களில்
கண்ணீர் துடைக்கும்
கைக்குட்டையவள்
என்
உயிரின் சுவாசத்தை
சுவாசிக்கும் மூச்சின்
கருணையும் அவள்!!!
No comments:
Post a Comment