Thursday 9 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 விளையாடும் பொம்மையாயில்லை

பெண்மை 

இன்மையிலும் இயல்பாய்

தன்னையே செதுக்கிடும்

உளியவள் 

நட்ச்சத்திர வானத்தூரமென

நினைத்தாலும்

 உள்ளங்கள்  நினைத்தால்

உள்ளங்கை சுமக்கும் சின்ன

பூவென மலர்வாள்

 இல்லையெனும் போதும்

இருப்பதாய் வாழ்வாள்

தொலையெனும் போது

 தூரமாய் வாழ்வாள்

இருந்தும் தன் சுமைகளை தூரமாய்

போட்டதில்லை எப்பவும் 

கண்கள் கற்பனையானாலும்

உயிரில்  தோற்பதில்லை பெண்மை 

பொய்கள் சூழ்ந்தே

தன்னையே அழித்தாலும்  

போராடியே  தன்னை ஜெயித்திட

இன்றுவரை மறந்ததில்லை 

அங்கிகரித்திட இதயத்தில் முள்லென்று

சொன்னாலும் தன்வலியேடு

தனிவழி போகும் பெண்மைக்கு இங்கே

இறைவனே காப்பு!!!



No comments: