Saturday 4 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 தேடலில் பூக்கும் கவிதையின்

அழகில் தாலாட்டும் இசையின் மடியே

என் உயிரின்  துடிப்பு

அந்த துடிப்பின் சத்ததிற்க்குள்

உறங்கவே என் விழிகள் ஏங்கும்

அந்த விழியின் தூக்கத்திற்க்குள்

ஒரு மூச்சுக்காற்று எனக்காக மட்டுமே

 விழித்திருக்கும் அந்த மூச்சுகாற்றின்

வெப்பத்திலே ஒரு தாய்மடி 

    எனக்க மட்டுமே  பூ பூக்க

அந்த பூவின் மென்மையில் ஒரு

தொட்டில் குழந்தையாகின்றேன்!!!

No comments: