Friday 3 February 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 மண்ணேடு ஒரு காதல்

 வந்து பெண்னோடு கதை பேசியே ஏங்க

மறையா நிலவாய் தேய்ந்து  

வளர்ந்து  ஓரு காதல்  மோதியே

காலம் கனிந்திட மனச்சிறக்குள்

மெல்ல  ஒரு காதல்  பெய்கின்றது

முதல் மழையாய்!!

சில்லென்ற சிலர்ப்பிற்குள் பூத்த

காதல்  வெட்கத்தில் வெப்பத்தை 

விழுங்கிட !நில்லென்ற  குரல்  கேட்டு

சிட்டுக்குருவியாய் மறைந்திட 

சொன்ன நாணம் தொட்டு  பூத்த காதல் 

வில்லென்று குடை பிடிக்க

மழையேடு பேசியே விளையாடி

தன்னை மறந்து பூ!!!

No comments: