தைமகள் பிறந்ததால்
பிறக்குமே வழிகளென
தையவள்வரவிற்காய்
ஏங்கிய மனங்களுக்கு
தையவள் விலங்குடைத்து
கொடுப்பாளே நம்பிக்கை !!!
அங்கும் இங்குமாய் அழிவு
வறுமைக்கு ஏனோ தண்டனை
வழியதனை தேடித் தேடி
மண்ணேடு சண்டையிட்டு சண்டையிட்டு
தேடும் விடியலில் அழிவுகள்
அரிசியை உயர்த்தியது ஆகாயவிலையாய்
இருந்தாலும் உற்பத்தி செய்ய
இல்லையே வழிகள்
அதிகாலையெழுந்தாச்சி குளிந்து
கோலமிட்டு அடுப்பெடுத்து கையோடு
பானையுமெடுத்தே தண்ணீரு விட்டாச்சி
தீயேடு நீரும் நம்பியே சூடாச்சி
தேடிடும் கைகளுக்கு
அரிசியும் கிடைக்குமே இன்றாவது
பால்தேடி கனிதேடி காய்கறியும்
தேடிய கண்கள் சூரியனைமட்டுமே கண்டது
இன்றும் ஆதலால்
ஓற்றை தீபத்தையெடுத்து ஏற்றுகின்றோம்
நாளைய விடிவுற்காய்
தையவளே பாராபட்சமற்ற
உன் வரவில் எம் வயிறு நிறைந்திட
வழிசெய்வாயென!!!
No comments:
Post a Comment