வறுமைக்கு பிறந்து
பசிக்கு பாத்திரமாகி
பாலுக்கு்அழுது
நேயினை உண்டு வாழ்
வழ்விற்குள்! வாழ்வின்
வாழ்க்கையினை
வாழ்வாய் உடுத்தி! பிறப்பினை
மறந்த மனிதன்
மறவா தெருவிளக்காய்
ஓளியினை தேடி
கண்ணீரும் வெள்ளமுமாய்
மிதந்திடும் பிறவிப்பினியின்
சாபத்தின் வரங்களாய்
கைகளை அழுக்காகி
பாசத்தை தேடுகின்றோம்
ஒரு நாள் விடியலும்
நமக்காய் மாறிடுமென
நம்பியே!!!

No comments:
Post a Comment