Tuesday 11 November 2008

எங்கிருந்தாய்?

வானத்து கார்மேகத்திற்குள்
நீர்த்துளியாய் நானிருக்க!
தென்றலாய் நீ வந்து
மழைத்துளியாய்
என்னையெடுத்து மண்ணுக்குள்
ஏன் மறைத்தாய்.......

மண்ணுக்குள் மறைந்து
மண்ணோடு மண்ணாய் கரைந்திட
 என்னை
ஈரமண்ணென்னறு நினைத்து
சின்ன சின்ன தூக்கனாங் குருவி
கூட்டிற்குள் மறைத்து  ஏன்வைத்தாய்!!

இருண்ட கூட்டிற்குள்
மண்ணாயிருக்கும் எனைத்தேடி
மின்மியாய் நீ வந்து உடல் கொடுத்து
உயிர் கொடுத்து என் இருட்டுக்கு
ஒளியேற்றி வைப்பாய்யென்று
தூக்கனாங்குருவிக் கூட்டிற்குள்
காத்திருக்கின்றேன் உனக்காய்......

No comments: