Tuesday 25 November 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

துயிலும் இல்லமெல்லாம்
துயிலாது தவிக்கும்
தூய்மையானவர்களே !!!
உங்களுக்கு ஈடாய் நான்
எதைச் சொல்ல!

பசித்த வயிற்றுக்கு
நீர்கொடுத்து
வாடிய முகத்தை
தாம் மறைத்து!

வந்த களைப்பை
எதிரிக்கும் காட்டா வீரம்
கொண்டு ! எழுந்த
உங்கள் மனதிற்கு ஈடாய்!
நான் எதைச் சொல்ல

இதை அறிந்து தாய் தவிக்க
பாசக்கல்லாய் நின்று
தாய் மனதை கடந்து!
தாய் மண்ணை காக்க
புறப்பட்ட உங்களுக்கு ஈடாய்!
நான் எதைச் சொல்ல!!


எதிரியின் செல் கண்டு
பட்ட காயம் மறந்து
வீழ்ந்த தோழன் உடல் தாண்டி
எதிரி மேல் போர் தொடுக்கும்
உங்கள் மனதின் உறுதிக்கு
ஈடாய் ! நான் எதைச் சொல்ல!!

மண்ணில் வீழ்ந்த உடலோடு
உயிர் ஒட்டி நின்றால்!
எதிரியைக் காணமுதல்
அமுதாய் விசம் பருகி
கொஞ்சம் கொஞ்சமாய்
விண்ணுலகம் தேடிடும்!
உங்களுக்கு ஈடாய்
நான் எதைச்சொல்ல!!

இன்று! உங்களுக்காய்
பூக்கும் பூக்களும்
மண்ணில் வீசும் தென்றலும்
வாசம் வீச!! மழைமேகம்
கண்ணீரை சென்நீராய்
தருகின்றது! எம்மை விட.........

No comments: