Wednesday 27 August 2008

தமிழ்

ஆதி அந்தம் தேடிய தமிழ்
ஆண்டவனுக்குப் பிடித்த தமிழ்

விதி வந்தும் அழியாத் தமிழ்
வீதியில் நின்றும் தொலைந்திடா
தமிழ்

அகதியாய் அலையும் தமிழ்
வறுமையிலும் மானம் காத்திடும் தமிழ்

எரியும் தீயில் எரிந்த தமிழ்
சாபலிலும் வீரமாய் பூத்திடும் தமிழ்


அஞ்சா நெஞ்சம் கொண்ட தமிழ்
யாரிடமும் தோற்க்காத் தமிழ்

வரலாற்று வலி கண்ட தமிழ்
வழி மாறிடா இன்பத் தமிழ்

உண்மைக்காய் வாழும் தமிழ் என்றும்
சரித்திடம் படைத்திடும் அன்புத் தமிழ்

2 comments:

Anonymous said...

காலத்தை வென்ற தமிழின் கவிதை துளிகள் அருமை.

சு.கஜந்தி said...

நன்றிகள் என் படைப்புக்கள் உங்களையும் கவர்ந்து நிற்பதற்கு,,,,,