Saturday 25 October 2008

தர்மம் வேண்டும்....

தரணியில் தொலைந்த
தர்மம் மனிதர்களால் தேடிடும்
தர்மம் தன்னைத் தானே!
தொலைந்து விட்டு இன்று
தேடுது!! வேண்டுமென்று!!

தலைவர்கள் கையில்
தவழ்ந்து கொண்டும்
கோடிகளை கண்டு பேசிக் கொண்டும்
தன்னைத்தானே தொலைந்து விட்டு
இன்று தேடுது!! வேண்டுமென்று


மேடைப் பேச்சில் வாழ வைத்து
யுத்தம் செய்து காத்து நிற்க
கடவுளோடு தோன்றி
கடவுளோடு மறைந்த தர்மம்
தன்னைத் தான் தொலைந்து விட்டு
இன்று தேடுது!! வேண்டுமென்று

தரணியியெங்கும் வேண்டும்
தர்மம் தேடும் தர்மம் !!
நிந்தம் பூக்கும் பூவாய்ப் போல்!

No comments: