Saturday 25 October 2008

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

சொல்லமே சொல்லம்

முத்து முத்து தமிழை
நீ விட்டு விட்டு பேசுகையில்!
என் இதயம் சிரிக்குதடா உன்னால்..

கட்டியணைத்து பல கதை சொல்லி!
என்னை கட்டிப் போடும்
உன் அன்பில்! ஆயுள் முழுதும்
சிறைப் பட்டு வாழ தோனுதடா
என் மனசு உன்னால்...

விட்டுப் பிரிந்து நான் போன போது
உன் முகச்சோகம் கண்டு!
வாடித் தவிந்து இயங்காது
நின்றதடா என் இதயம் உன்னால்...


மீண்டும் வந்து சேர்ந்து
பேசிச் சிரிந்த போது!
என்னோடு தோன்றி வாழ
ஆசை கொண்டதடா
ஓர் உலகம் உன்னால்.....


உன்னைக் கட்டியணைத்து
முத்தம் கொடுத்து சொல்லி மகிழ்ந்து
நிக்கும் போது இந்த உலகமே
நீயென்று ஆனதடா எனக்கு....

No comments: