Tuesday 4 November 2008

மனிதா ஒரு நிமிடம்..

எதை இழந்து எதைத் தேடி
எதை எடுத்து எதை
அடையப் போகிறோம்
மனிதா! நம் வாழ்வில் நாம்!!

அறிவு வளர்த்து அறியாமை வளர்த்து
பூமி கடந்து வான் தொட்டு
எதைத் தேடி எதை எடுத்து
எதை அடையப் போகிறோம்
மனிதா! நம் வாழ்வில் நாம்!!

இனம் பிரித்து மொழி பிரித்து
தனித் தனியாய் வாழ்வமைத்து!
சண்டை போட்டு சண்டை போட்டு
எதைத் தேடி எதை எடுத்து
எதை அடையப் போகிறோம்
மனிதா! நம் வாழ்வில் நாம்!!

பூமியழித்து பூவழித்து
சிகப்புக் கோலம் நாம்
போட்டு! மரணஓலத்தின் நடுவே
கண்ணீர் கடலின் மேல்
எதைத் தேடி எதை எடுத்து
எதை அடைய போகிறோம்
மனிதா! நம் வாழ்வில் நாம்!!!

No comments: