Thursday 14 August 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

தமிழர் எம் வாழ் நிலத்தில்
நெருப்புப் பொறியால்
குண்டு நெருப்புப் பொறியால்
அரசு கோலங்கள் போட!
எம் இருண்ட வாழ்விற்கு
ஒளியாய் குடிசைகளும் எரிய!

நித்தம் நித்தம் நாமும்
பாதுகாப்பிற்கு ஓரிடம் தேடி!
இரவு பகல் அறியாது
ஊண் உறக்கமில்லாது
உயிர் காக்க ஓடினாலும்
வானத்தின் கீழ் எம் வாழ்வு
என்பதால்.....கண் இழந்து
கையிழந்து காலிழந்து
இறக்காமல் இருந்தவர்
வலி போக்க மருந்துமின்றி
உதவிக்கு ஆளுமின்றி
சுற்றி எரியும் நெருப்பின்
மத்தியில்
ஏக்கத்தோடு தவிக்கின்றோம்!
காத்திட யாருமில்லா துயரோடு.............

No comments: