Thursday 23 October 2008

நீ சொல்வாயா?

வெண்மேகமாய் வந்து
எனைக் காக்கும் என் மேகமே!
நீ அப்பப்ப கருமேகமாய் என்னை
மூடி நிற்பது! சரிதானா என நீ சொல்வாயா?


துளித் துளியாய் துறல் போட்டு
என்னை நதியாய் நனைத்த
என் மழையே !நீ அப்பப்ப
வெள்ளத்தில் மூழ்கடித்து
தவிக்க விடுவது!சரிதானா என நீசொல்வாயா?

பூங்காற்றாய் என் மீது வீசும்
பூந்தென்றலே என் வாசம் சுமக்கும் நீ
அப்பப்ப சுறாவழிக் காற்றாய்
சுழட்டி அடிப்பது சரிதானா என நீ சொல்வாயா?


வெள்ளை வெள்ளையாய் என் மேல்
படந்திட்ட என் பனித்துளியே!
தேன்துளியாய் நானிருக்க
அப்பப்ப தேனவளை மண்ணுக்குள்
சரிந்திடச் செய்வது சரிதானா என நீ சொல்வாயா?

No comments: