ஒர் ஜென்மப் பூ.............
கற்பனையும் கனவும்
நமைச் சேர்க்க
வானவீதியில் நீயும்
மண்தரையில் நானும்
பிரியா உறவாய்
பிரிந்தே வாழ்ந்ததால் !!
உன் பிரிவு
கொஞ்சம் கொஞ்சமாய்
எனைத் தாக்க!!
என் இதயம்கொஞ்சம் கொஞ்சம்
வலியால் துடிக்க!
நினைவுகள்
கொஞ்சம் கொஞ்சமாய் என்னைவாட்ட !
என் இதழிருந்தும்
மலரா மலரானேன் உன்னால்.....
ஆனால் இன்று!
மீண்டும் உன்னைக் கண்டு
மகிழ்ச்சி பூவாய் ....
இதழ்விரித்து
மலருக்குள்!
மலராய் மலர்கின்றேன்
என் வரவை கண்டு
எனைப் பார்த மலர்க் கூட்டம்
கொஞ்சம் வாடிபோனது
ஏன்னென நான் கேட்க!!
எங்களுக்கு சொந்தமென நினைத்த
பனியும் மழையும்
தென்றலும் கதிரவனும்
எனி உன் உறவைத் தேடுமே
என்ற ஏக்கத்தோடு................
No comments:
Post a Comment