Thursday 11 December 2008

எழுந்திரு மாமா எழுந்திரு....

அதிகாலை வந்து போக
அந்தி சாயும் நேரம் வரை
அசையாத் தூக்கத்தில்
எப்போதும் வாழ்ந்திடும்
என் மாமாவே எழுந்திரு!

வட்டிக்கு வட்டி வேண்டி
காசுடன் காசு சேர்த்து
மற்றவர் கஸ்ரத்தில் வாழ்ந்திடும்
என் மாமாவே எழுந்திரு!

அடுத்தவர் வயிற்றில் அடித்து
உன் வயிற்றை வளர்ந்து
குட்டி யானை போல்
வீட்டை சுற்றிச் சுற்றி வந்து
என்னை அதிகாரம் பண்ணும்
என் மாமாவே எழுந்திரு!

கொட்டிக் கொட்டி காசை
ஊரில் கட்டிய வீட்டை
ஆமி அடித்து மண்ணாய் ஆக்க
கவலையின்றி சிரித்து
பெருமை பேசியது போதும்!
என் மாமாவே எழுந்திரு!

அடுத்தவர் வேர்வையில் வந்த
பணத்தை! பறிந்த பாவத்தால்
அழிந்து போனதை எண்ணி வாழ
எழுந்திரு என் மாமாவே எழுந்திரு

லட்சம் லட்சமாய் பாவத்தை நீ
சேர்க்க! கோவில் கோவிலாய்
அதை நான் போக்க வேண்டாத
கவலை வேண்டாத வாதம்!
வேண்டாமே என் மாமா எழுந்திரு
பவத்தை போக்கிட எழுந்திரு

No comments: