Tuesday 11 November 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

வாழும் மண்ணிழந்து
வாழ்விழந்து போகும்
வழிதானிறி தவியாய்
தவிக்கம் எம் உறவு காக்க!

நாம்,எம் நிலமை தனை
எழுதி எழுதி கையும் சலித்தே வலிக்க!
தூரம் தூரமாய் எம் நின்மதியும்
தொலைந்தே போக!

உம் முன்னே
மனிதர்களாய் காத்து காத்து
தலைசாய்த்து சாய்ந்து
எம் நிழமை சொல்ல !தேடித் தேடி
திரும்பித் திரும்பி கூடிக் கூடி
கூட்டங் கூட்டமாய் நாங்கள்
வருகழன்றோம்....

சாக்கு போக்கு சொல்லிச்சொல்லி
எம்மை ஓரக்கண்ணால்
பார்த்துப் பார்த்து பேசிப் பேசி
எம்மை ஏமாத்தி விளையாடும்
உலகே! எம்மை ஏமாந்தியது போதும்

ஒரு முறை எம்மை நேராய் பார்த்து
எம் வேதனை அறிந்து
எம் உண்மை புரிந்து
உதவிட வா !!!!!

No comments: