Thursday, 27 November 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

செந்தனல் குருதியில்
செங்கதிராய் உதித்த
செந்தமிழ் வீரர்களே!!
செந்தாமரைப் பூவாய்
தோழமை உணர்வோடு
தலைவன் தோழனாய்
தோல் கொடுத்தவர்களே!!

உண்மை வாழ்விற்காய்
உள்ளத்தின் உறுதியோடு
தோல்வியிலும் வெற்றிகானும்
உயர்ந்த எண்ணத்தில்
உயர்வாய் நிற்பவர்களே!!
உலகை வென்று
எங்களோடு கலந்து
எழிமையாய் எங்களை
என்றும் உங்கள் பாதையில்
மாற்றிப் போனஎம்
 வீரர்களே!!!

உங்களுக்காய் நாங்கள்
ஆயிரம் ஆயிரம் தீங்கள்
ஏந்தி! தாழ் பணிந்து
தழிழால் தவிந்தெழுந்து
தனித்தனி பாதை மாற்றி
தருகின்றோம் உறுதி!

இந்த புனித நாளில்
தரணியெங்கும் ! தமிழ்
தலைநிமிர்ந்து வாழ!
உங்கள் பாதையில்
தொடர்வோமென!

No comments: