Wednesday 10 December 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

கொட்டும் மழையின் நடுவோ
கூரையில்ல மனித வாழ்வு
கொடி மரங்களைப் போல்
நட்ட நடு வெளியில் நனைகின்றது!
இன்று மனிதவுரிமையால் !!!


குடிக்க தண்ணீர் வான் கொடுக்க
வயிற்று பசிக்கு வழியின்றி
சேற்றிலும் சகதியிலும்
சேர்ந்து துடிக்கின்றது ஓர் இனம்
இன்று மனிதவுரிமையால்

வார்தைகளை அடுக்கடுக்காய்
அள்ளி வீசினாலும்
அடிமை வாழ்வு தொடர
காத்திட யாருமின்றி வாடுது
ஓர் இனம் மண்ணில் இன்று
மனிதவுரிமையால்

ஆமி தேடிச் சுட்டது போக
கொட்டும் மழை அழித்தது போக
ஆற்று வெள்ளம் அள்ளியது போக
மேட்டு மண்ணில் தேடுது
ஒர் இனம் காச்சலோடு இன்று
மனிதவுரிமையால்


சொல்லிச்சொல்லி சொல்லும்களைக்க
சொல்ல வார்தையின்றி தமிழும் தவிக்க
சொல்லியும் கதைத்தும் கேட்டும்
நடக்க போவது எதுகுமின்றி!
ஓர் இனம் தவிந்து நிக்கின்றது!
இன்று மனிதவுரிமையால்......

No comments: