Friday 5 December 2008

ஒர் துடிப்பின் சிரிப்பு

வானம் நிலவை
நிலையாக்க துடிக்க
சூரியன் வானத்தை
பொய்யாக்கி சிரித்தது!!

பகல் பூமியை
நிலையாக்க துடிக்க
இரவு பகலை
பொய்யாக்கி சிரித்தது!!

நந்தவனம் பூக்களை
நிலையாக்க துடிக்க
மழைச்சாரல் நந்தவனத்தை
பொய்யாக்கி சிரித்தது!!

பூ தேனை
நிலையாக்க துடிக்க
வண்டு பூவை
பொய்யாக்கி சிரித்தது!!

தென்றல் வாசத்தை
நிலையாக்க துடிக்க
மனிதன் தென்றலை
பொய்யாக்கி சிரித்தான்!!

நான் உன்னை
நிலையாக்க துடிக்க
மரணம் என்னை
பொய்யாக்கி சிரித்தது!!

மீண்டும் உன்னோடு
பொய்யாய் பொய் சிரிக்க
பூமியின் தொடராய் சிரிப்பும்
துடிப்பும் .................

No comments: