Thursday 25 December 2008

பலகனாய் பிறந்திடு இறைவா....

பாவத்தின் உச்சியில் மனிதன்
நின்று கொண்டு
அணுகுண்டு கொண்டு
உயிரெடுத்து உயிரெடுத்து
மெல்ல மெல்ல அறில்லா
மிருகத்தை வெல்லுகின்றான்
உன்னை நேசித்துத் நேசித்து!

புனிம் சொல்லிப் போன இறைவனை
மாட்டுத் தொழுவம் தோறும்
ஆண்டுக்கு ஆண்டு
மீண்டும் மீண்டும் தேடுகின்றேன்
உண்மையாய் இந்த நாளில்.....

ஆட்டு மந்தை மேய்ந்தவனே
புதுச்சட்டை வேண்டாம்
ஆடம்பரம் வேண்டாம்
நீ பிறந்த ஓலைக் குடில் போதும்
நாம் நின்மதியாய் வாழ
மனித மந்தை அழிவதை நிறுந்திட
பாலகனாய் பிறந்திடு மீண்டும்

அழகிய பூமி தனைப் படைத்து
அதனை ஆள எம்மை படைத்த
இறைவா! இப்போதாவது எம்மால்
அழியும் பூமி தனைக் காத்திட!
யாரையும் படைக்காது  நீ
போனதால்
பாலகனாய் பிறந்திடு மீண்டும்

No comments: