Friday 11 July 2008

என் பெண்ணே

என் பெண்ணே சின்னக் கண்ணே
அவன் மனசை உன் மனசு
ஏற்றுக் கொண்டேன் என்று!
சொல்லச் சொல்லியதா?

இப்படியே..
அறியாத அறியாமை அறியாமல்
உன்னை படுகுழிக்குள் தள்ளிச் சிரிக்க!
நீ மட்டும் பலர் முன்!அடைமொழி
குற்றவாளியாய் !தோன்றித் தவித்து!
இழந்ததை இருளுக்குள் தேடித் தேடி
ஏமாந்து ஏமாந்து உன் மனசால்
உலகில் ஏமாழியாகி விடாதே
என் பெண்னே!

ஒரு முறை சிந்தித்து எழுந்து
உன் சிந்தனையால் உனைச் செதுக்கி
துயரத்தை எறிந்து நிமிர்ந்து நில்லடி!
என் பெண்ணே!!

நிலையான அழகை இவ்வுலகில்
படைத்திட வெளியழகை நம்பி
உன் அழகை இழக்காமல் வாழ்ந்திட
எழுந்து நடந்திட விரைந் வாடி
என் பெண்னே!!

No comments: