Tuesday 4 November 2008

பூவிற்கும் ஓர் கதை ........

அதிகாலை தானெழும்பி
நந்தவனப் பூவென்று
தான் வாழ பூப் பறித்தாள்
நந்தவன் சென்று!

அதிகாலை காலை  தேனீருக்கு
வழியின்றி சரம் தொடுத்து
அழகழகாய்  கூடைக்குள் அடுக்கி
தலை சுமந்து ஓடோடிச் சென்றாள்
கோயில் வாசலுக்கு!


உள்ளிருக்கும் கடவுளுக்கும்
தெரிந்த கதையை கண்களால்
சொல்லி தலையால் நினைவு படுத்தி
காத்து நின்றாள் வருவோர் போவோர்
முகம் பார்து தன் பூவைவிற்பதற்காய்!

கிழிந்த ஆடை மற்றவர்
கண் தைக்க
வயிற்று பசி இசை பாட
தன் தலைச் சூட பூ
மற்றவர் தலை சேர
விதம் விதம் மாய்
கோர்த்தால் கடவுளுக்கும்
சேர்த்து இன்றாவது
தன் வியிற்று பசி போகாதா
என்ற ஏக்கத்தில்....

No comments: