ஓவ்வொரு முறையும்
உனக்கு விடை
கொடுத்திடும் போது
ஒன்றை கற்றுக்கொள்கின்றேன்
ஆனாலும்
மனமென்னும் மாயகண்ணாடி
உன்னை நம்பியே ஏமாந்துவிடுகின்றது
இம்முறை உன்னில்
என்னை புதைக்கின்றேன்
நான் பூப்பதும்
என்மீது பூக்கள் விழுவதும்
நீ எழுதும் கதையே
நானெழுதித்தோற்றதால்
உன்னிடம் விட்டுவிட்டேன்
நீ கைபிடிக்க
நான்விழியிழந்தே உன்னேடு
நடந்திட போகின்றேன்
இருளுக்குள்
தொடகட்டும் என்போராட்டம் !!!!
போரா
No comments:
Post a Comment