பூத்த பூவிற்குள்
நான் ஒருபூவினின்
சருகானேன்!!
கண்கள் தேடிடும்உறவிற்குள்
நான் ஒரு இறந்து போன
உயிரானேன்!!!!
பார்க்கும் பார்வைகள்
நான் ஓரு ஒவியத்தின்
இருளானேன்!!!!
எழந்தேடும் கற்பனைக்குள்
நான் ஒரு பொருளற்ற
சொல்லானேன் !!!
விழுந்தேடும் கனவிற்குள்
நான் ஒரு பகல்
நேரத்தூக்கமானேன்!!!
விரைந்தோடும் காலத்திற்க்குள்
நான் ஒரு முகவரியற்ற
அஞ்சலானேன்!!!!
நின்று பேசும் மனிதனுக்குள்
நான் ஒருபொழுதை போக்கு
தேடலானேன்!!!!
நேசமென்ற இதயத்திற்குள்
நான் ஒரு குறும் செய்தி
தகவலானேன் !!!
பாசமென்ற உள்ளத்திற்குள்
நான் ஒரு ஏமாறும்
கைதியானேன்!!!
இருண்ட வாழ்க்கைக்குள் என்றும்
நான் ஒரு ஓளிகொடுக்கும்
ஓளியாவேன்!!!
No comments:
Post a Comment