முற்களின் நடுவே
விழுந்தபூவிற்குள்
கற்களின் வலிசொல்லிய
காயத்தின் மேல்
சொற்கள் கொண்டு மருந்தானாய்!!!
என் இதயதுடிப்பில்
சேரா ஓற்றை வார்த்தைஉன்னையையும் என்னையும்
பிரித்தது தனித்தனியாய்
அந்த இடையில்
இடைவிட ஏமாற்றம்
என்னை தூரமாக்க
தூரமாய் விழுந்த
தூரத்தின் நடுவே
கருகிப்போன மலராய்
தேடிபார்க்கின்றேன்!! உயிருள்ள
ஓரு சொல்லை
இல்லையென்றது தமிழ் !!
பூவை விட்டு பிரிந்த
வாசம்போல் !
உன்னிடம் வந்தே
கடனாய் போன
கடன்காரியாய் தமிழிடம்
தனித்தே தோற்றுகிடக்கின்றேன்
கருகிப்போன பூவைப்போல் !!!
No comments:
Post a Comment