Monday, 30 July 2007
Sunday, 29 July 2007
வாழ்க்கை..
எனக்காய் நீ தந்தாய்
உனக்காய் நான் இருக்க!இடையில் யார் வந்தார்?
என்னை ஏனோ நீ பிரிய
உன்னினைவுகள்
எனைச் சுட என்னவனே
உன்னவளாய்
உன் வாழ்கையில்
இன்னும் நான்
தொடர்வே இல்லா
தொடர்கதையாய்
தொடர்கின்றேன்.....
Friday, 27 July 2007
முகவரி
பெண்ணே உன் காதலின்
எல்லை அழித்து
உணர்ச்சியின் கவர்ச்சியால்
பெண்மையின் மென்மை
அழித்து
பத்துமாதம் சுமந்த தாய்மை
தனை அழித்து
காலத்தின் மாற்றமாய்
சிசுவை அழித்து
உன்னை நீயே
அழித்துக்கொண்டு
யாரைக் குறை
சொல்லுகின்றாய்
உன்னை இழந்து
உன் வாழ்வை இழந்து
மானம் காத்திடவா
தப்பான முகவரி
எழுதுகின்றாய் பெண்ணே........
உன் சிந்தனை மாற்றி
உன் முகவரி மாற்று
புதிய வாழ்கைக்காய்
புதிய உலகிற்காய்
மற்றவரை தண்டிக்க
முதல்..
எல்லை அழித்து
உணர்ச்சியின் கவர்ச்சியால்
பெண்மையின் மென்மை
அழித்து
பத்துமாதம் சுமந்த தாய்மை
தனை அழித்துகாலத்தின் மாற்றமாய்
சிசுவை அழித்து
உன்னை நீயே
அழித்துக்கொண்டு
யாரைக் குறை
சொல்லுகின்றாய்
உன்னை இழந்து
உன் வாழ்வை இழந்து
மானம் காத்திடவா
தப்பான முகவரி
எழுதுகின்றாய் பெண்ணே........
உன் சிந்தனை மாற்றி
உன் முகவரி மாற்று
புதிய வாழ்கைக்காய்
புதிய உலகிற்காய்
மற்றவரை தண்டிக்க
முதல்..
Tuesday, 24 July 2007
கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,
எங்கள் தேசத்தின் வரலாற்றில்இணைந்திட்ட
முதிர்வில்லா தோழனே
தியாகத்தின் தியாகமே
எம் நெஞ்சகத்தே குடி
கொண்டநெருப்பின் நெருப்பே!
யுத்த களம்தனில்
வீருநடை போட்டு
வெற்றி வெற்றியென
வென்று குவித்த
தோழனின் தோழனே
மரணத்தை உடலக்கு கொடுத்து
இலட்ச்சிய பாதைக்கு மரணம்
இல்லவே இல்லையென
எரிந்திடும் புதைகுழியில்
இருந்து விருட்சமாய்
எழுந்திட்ட வீரர்களே! உம் விடுதலைக்கு
எம் தீப அஞ்சலி!
உங்களுக்காய்
எம் விழிணீர் அகற்றி
நெஞ்சம் தனில் நெருப்பேந்தி
சிந்தனை சுடரோடு
தீயாய் இணைந்து
பூக்கள் தூவி நிக்கின்றோம்
மீண்டும் மீண்டும்
ஈழம் தனில்
மனிதபூவாய் பூத்திட
வேண்டும் என்று.......
***********
எம் தேசத்தின் சரித்திரத்தில்
ஒன்று கண்ணீரில்
நனைகின்றது இன்று
பூவெடுத்து கண்ணீர்
அஞ்சலி செய்கின்றோம்
யூலையே ... நீ தந்த
கறுப்புப் புகையால்
கருகி விட்ட
மனித நேயத்தின்
நினைவுச்சுமைகளை
அழித்திட முடியாமல்
கரைகின்ற கண்ணீர்
அமுதசுரபியாய் எம்மிடம்
இருப்பதால் கரைகின்றோம்
கண்ணீரில் இன்றும்.....
விழியேடு மொழி பேசும் சாரல்.......................,
யாரும் யாரையும்
விரைவில் வென்றிடத்
தேடிய பாதையாய்
நீ ஏன் வந்தாய்!!
கண்ணே மணியே என
காதலால் கொஞ்சிய
காதலின் சரித்திரத்தை சகதிக்குள்
தள்ளி நீ ஏன் வந்தாய்!!
பாசத்தை போலியாக்கி
போலிக்குள் உன்னை வைத்து
துரோகத்தை நட்பாக்கி
தூய்மையில்லா சீரழிவை
தேடும் மனிதன் தன்னைத் தான்
வெட்டும் கொடுமையாய்
நீ ஏன் வந்தாய்?
புரிந்து கொள்ளா மாயையென
சொன்னவர் மாண்டிட
மண்டவர் சொல்லியதை
வாழ்பவர் மறுந்து
புரியாது போனதால்
உதிர்ந்து தவிக்கும் தவிப்பின்
தவிப்பாய் நீ ஏன் வந்தாய்?
புரிந்து கொள்ள வைத்தாலும்
புரியாது வாழ்வதும்
உன்னாலே தானே சதியே..................
Monday, 23 July 2007
கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,
இயற்கையின் செழிப்பும்
பசுமையின் விரிப்பும்
பார்த்திடும் இடமெங்கும்
நீல வர்ணமாய் கடல் அலையும்
மோதி மோதியோடும்
பெண்ணின் நெலிவாய்
நதிகள் நடைபழக
வயல்வெளியெங்கும்
காதல் சிட்டுக்கள்
கதைபேசி மகிழ்ந்திட்ட
அழகிய தீவு
இன்று...
புதைகுழியாய்
எலும்புக்கூடுகளின்
சுடுகாடாய்
பெண் மங்கையின்
கற்பைப் பறித்திட்ட
அரக்கனின் ஆக்கிரமிப்பாய்!
அழுதிடும் குழந்தையின்
எதிரியாய் மாறிட வாழ்வின்
வாழ்கையில்லா தேசமாய்
இழப்புக்குள் சிக்கித்
தவிக்கின்றது
ரசிக்க வந்தவர்கள்
அவலங்களை படமாக்கி
சொல்லியும் புரியாத
அழிவுக்குள் மீளமுடியா
மனிதர்களானோம்
அழகிய தீவில்
பசுமையின் விரிப்பும்
பார்த்திடும் இடமெங்கும்
நீல வர்ணமாய் கடல் அலையும்
மோதி மோதியோடும்
பெண்ணின் நெலிவாய்நதிகள் நடைபழக
வயல்வெளியெங்கும்
காதல் சிட்டுக்கள்
கதைபேசி மகிழ்ந்திட்ட
அழகிய தீவு
இன்று...
புதைகுழியாய்
எலும்புக்கூடுகளின்
சுடுகாடாய்
பெண் மங்கையின்
கற்பைப் பறித்திட்ட
அரக்கனின் ஆக்கிரமிப்பாய்!
அழுதிடும் குழந்தையின்
எதிரியாய் மாறிட வாழ்வின்
வாழ்கையில்லா தேசமாய்
இழப்புக்குள் சிக்கித்
தவிக்கின்றது
ரசிக்க வந்தவர்கள்
அவலங்களை படமாக்கி
சொல்லியும் புரியாத
அழிவுக்குள் மீளமுடியா
மனிதர்களானோம்
அழகிய தீவில்
Sunday, 22 July 2007
கிறுக்கல்கள்,
என் கண்ணில் நீர் முத்தாய்
சிதறும் போது
உன் பாசங்கள் என் இதயத்தில்
பதியப் படுகின்றது
சிதறும் போது
உன் பாசங்கள் என் இதயத்தில்
பதியப் படுகின்றது
இந்த உலகை
மறக்கின்ற நிமிடங்களாய்
கவிதையை அணைந்துக்
கொண்டோன் என்
மெளனசிரிப்பொலியால்
பலதை மறைந்துக்கொண்டேன்
இந்த வாழ்வை ரசிப்பதால்
இன்னும் வாழ்ந்து கொண்டு
இருக்கின்றேன்
***
என் சேகங்கள்
உன் இதயத்தை
தொட்டதா?
ஏன்? என்மீது
கோபம் கூட
வருவதில்லை
உன் பாசம்
எனக்கு வேதனைகளை
தரும்போது அமைதியாய்
சிரித்துக் கொண்டேன்
என்பாசத்தை பரீட்சித்தவன்
என்பதால் அல்ல
என்மீது - நீ கொண்ட
அன்பினால்
***************
எத்தனை கொடுமை
நீ தந்தாய் எனக்கு
உன்னை நான்
நேசித்ததால்!
போலியாய் நீ வந்தாய்
வேதனையென்றேன்
உண்மையாய் மாறினாய்
அப்போதும் வேதனைகள்
பல கண்டேன்
உன்னை நான்
எப்படி வெல்வது?
புரிந்துகொள்ளா
உணர்வே நீ
சொல் எனக்காய்
கொஞ்சம்
இரத்தமும் சதையும்
சேர்ந்த என் உடம்பில் நீ
எங்கே இருக்கின்றாய்
புரியாது தேடுகின்றேன்
புரியாத உணர்வே
உன்னை வெல்வதற்காய்
Saturday, 21 July 2007
Friday, 20 July 2007
நட்பின் சாரல்.............,
கவிதையின் கவியாய்
எங்கோ பிறந்து என்
தங்கைக்கு உறவாய்
என்னோடு உறவாகி
என் சோகங்களின் வலியை
கண்ணீரில்லா சிரிப்பொலியாய்
எனக்கே தந்து
என் உணர்வுகளை
சொல்லாமல் செய்து
பிரமிப்பாய் ரசிக்க வைத்து
சிரிக்கவைத்தவனே! உன்னோடு
சண்டைகள் பல போட்டு
முரண்பாடுகள் கண்டபோதிலும்
அக்காவாய் தொடரும்
நம் பாசம் என்றும்
தொடர்ந்திட வேணுமடா?
உன் அக்காவாய்
உன் கனவுகள் நனவாகி மகிழ்ச்சி
பொங்க வாழ்ந்துகின்றேன் என்றும்
எங்கோ பிறந்து என்
தங்கைக்கு உறவாய்
என்னோடு உறவாகி
என் சோகங்களின் வலியை
கண்ணீரில்லா சிரிப்பொலியாய்
எனக்கே தந்து
என் உணர்வுகளை
சொல்லாமல் செய்து
பிரமிப்பாய் ரசிக்க வைத்து
சிரிக்கவைத்தவனே! உன்னோடு
சண்டைகள் பல போட்டு
முரண்பாடுகள் கண்டபோதிலும்
அக்காவாய் தொடரும்
நம் பாசம் என்றும்
தொடர்ந்திட வேணுமடா?
உன் அக்காவாய்
உன் கனவுகள் நனவாகி மகிழ்ச்சி
பொங்க வாழ்ந்துகின்றேன் என்றும்
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
காதல் சொல்லா
கற்பனையில் கலந்திட்ட
உறவுவே! என்
உணர்வுகள் புரிந்திடாமல்
ரசிக்கத் துடித்தவன் நீ
ஆனால்...
யாரிடமும் காணப் பாசம்
உன்னிடத்தில் கண்டேன்
நான்...
கற்பனையில் கலந்திட்ட
உறவுவே! என்
உணர்வுகள் புரிந்திடாமல்
ரசிக்கத் துடித்தவன் நீ
ஆனால்...
யாரிடமும் காணப் பாசம்
உன்னிடத்தில் கண்டேன்
நான்...
பல பேரைக் கடந்து
வந்த போதிலும்
உன் மென்மையான
இதயம் என்னை விட்டகலா
சிந்தனைஆனது ஏனோ?
துடித்திடும் என் இதயம்
சொன்னது, துடிக்காத உன்
இதயம் வரைந்து சென்றது
காதல் ஒவியம் தானென்று!
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
கற்பனைகள் பல கொண்டு
பட்டங்கள் பெற்ற போதும்!!
வாழ வழியின்றி
வாழ்தயிடம் தானின்றி
தூரதேசத்தில் துரத்தும்
சுமைகளில் தொலைந்த
தமிழன் தேடியும் காணா
கற்பனையாய்
உடல் வருத்தி
உணவு விடுதியில்
உழைக்கின்றான் தன் குடுபத்திற்காய்!!
மறத்து போன உணர்வுகளில்
தொலைந்த மகிழ்ச்சியை
அவசர அவசரமாய்
தேடிடும் தமிழன்!
இயந்திரத்தேடு போட்டியிட்டு
போட்டியிட்டு வென்று
சவற்கார நுரைக்குள்
கைகள் குளிக்க
களைத்து வெறுத்து
வலியோடு வாழும் கொடுமைகளை
சொன்னால் தான் புரியுமா?
பரிதாவ மனித வாழ்கை
ஏக்கங்கள் தனைக் கொண்டு
கண்ணீரில் கரைந்திட
சந்தோஷ தேடலில்
தொலைந்து போன
நாட்களை தேடுது மனசு!!!
Wednesday, 18 July 2007
மூன்றாம் ஆண்டு நினைவு [19-07-2007]

மூன்றாம் ஆண்டு நினைவில் என்ன செய்வது என்று புரியாமல் கவிதைகளால் அஞ்சலி செய்கிறார்கள் இவர்கள்...
யார் இவர்கள் என்று தொக்கி நிற்கும் கேள்வியை விடுங்கள்... ஏதோ ஒரு வகையில் இந்தக் குட்டிப் பெண்ணின் நினைவை இதயங்களில் ஏந்தியவர்கள் இவர்கள்...
என் மடியில்
பூத்திட்ட சின்ன
மலர் இவள்
என்னைத் தாயாக்கி
எனக்குத் தாயாகி
தன் சுவாசத்தை
எனக்காய் தந்து
இன்று என்
சுவாசத்தில் கலந்திட்டவள்
மீண்டும் பூவானாள்
இங்கே என்றும்
என்னோடு வாழும்
அவள் வாசம்
இந்த
கவிதைப் பூக்களில்
வாழ்வதால் என்
ஆத்மா சமர்ப்பணமானது
இங்கே...!

------கவி ரூபன் -----------------
சின்னப் பெண்ணே
நீ மறைந்து
மூன்றாண்டாம்
உன் நினைவு
மட்டும் எப்படி இன்னும்
எல்லோர் மனதிலும்
முரண்டு பிடித்து
முக்காலி போட்டு
உட்கார்ந்து இருக்கின்றது?
பக்கத்தில் இருந்து
பார்த்துப்
பழகியறியாதவன்
நான்...
இருந்தும் செவிவழி கேட்டு
நிழற்படத்தில் பார்த்துத்
தெரிந்த எனக்குள்ளும்
எப்படி நீ விஷ்வரூபமானாய்?
வாழ்க்கை
விசித்திரம் தான்
வந்து போகும்
உறவுகளும் அப்படியே...
யாரோ
கிழித்த கோட்டில்
நீயும் நானும்
எப்படிச் சொந்தங்களானோம்?
சாவு அருமையான
விஷயம்!
இறப்பது தெரிந்தும்
'நிரந்தர இருப்பு'
அனுமதி பெற்றது போல
செய்யும் செயல்களில்
தான் எத்தனை
முரண்பாடு?
குட்டிப் பெண்ணே
நினைவுச் செதில்கள்
குற்றி
கண்கள் குளமாகின்றது
உண்மை தான்
ஆனாலும்
வெறும் வார்த்தை
ஜாலங்களில்
பாசாங்கு செய்யப்
பிடிக்கவில்லை
மறுபிறவி
உண்டெனின்,
எனக்கு மகளாய்
வந்து பிறவேன்
மகிழ்ந்து விளையாடலாம்!
எவ்வளவு அழகாய்
முடிச்சுக்கள்
விழுகின்றது...
வாழ்க்கை அழகு தான்
அவரவர் புரிதல் படி!
பெண்ணே
நினைவுக் கவிதை
என்று நினைத்து தான்
தொடங்கினேன்
ஆனால்
வாழ்க்கையின்
வடிவான பக்கங்களைப்
புரட்டத் தொடங்கிவிட்டேன்
உதிருகின்ற
பூக்களைப் பார்த்து
அழுவதைவிட்டு
மலருகின்ற பூக்களைப் பார்த்து
மகிழ்வதே
உன் நினைவு
எனக்குச் சொல்லும்
பாடம்!
உன் நினைவை
ஏந்திக் கொண்டு
வாழ்வென்னும் பெருங்கடலில்
நீந்தப் போகின்றேன்
ஒரு சமயம்
இருவரும் சந்திக்கலாம்!
[http://kaviyarankam.blogspot.com/2007/07/blog-post.html]
-------சுபா (சித்தி) ----
பூவொன்று
உதிர்ந்ததென்று
தாயின்று அழுகையிலே
விழிநீர் துடைப்பதா
விம்மல் அடக்குவதா
அல்லல் துடைக்கும்
கையொன்று எப்போதும்
ஆறுதலாய் பற்றுமென்று
தோளினைப் பற்றுவதா?
எதுவும் தோன்றாமல்
மனசுக்குள் மானசீகமாய்
மங்களங்கள் தோன்றட்டும்
என்று
மகேசனை வேண்டுவதா?
நீ
சிரிக்கும் போது
சிரிக்கவும்
அழும்போது
விழிநீர் துடைக்கவும்
நல்ல உள்ளங்கள்
சுற்றி இருக்க
சோகமென்ன என்றுரைப்பது
தானே சரி?!
----அம்மம்மா அப்பப்பா.......
எங்கள் முதல் முத்து
நீயம்மா எங்கள்
முதல் சொத்தும்
நீயம்மா காலங்கள்
கடந்தும் மறந்திடா
உறவும் நீயம்மா
உன் அன்னையின்
ஆராக் காயமும்
நீதான்னம்மா
........சித்தப்பா சித்தி....
உனக்காய் தேடித்
தேடித் நான்
அனுப்பிய அத்தனை
வாழ்ந்துக்களும்
உன் அன்னையிடம்
ஆனால் நீயோ.....
இறைவனிடம்
..............மாமா........
வெண்பனியில்
உன்னை நனைத்து
நான் ரசிக்க
என்னோடு சண்டை
போட்டவளோ....
இப்போது பனிகாலத்து
நினைவு நீயம்மா
...........மாமா சித்தி.....
உன்னை பார்கவில்லை
அதனால் நாங்கள்
உன்னை மறக்காது
தவிக்கும் அன்னைக்காய்
அழுகின்றோம்
..................நட்பு ..உறவுகள்..
சின்ன வயதிலே
பாசத்தின் ஆழம்
சொன்னவள் நீ
அழகின் ரசனை
சொன்னவள் நீ
குறும்பால் கவர்ந்தவள் நீ
அந்ததனையும் நினைவாய்
இருக்க நீமட்டும்
நிழலாய் ஏன்
மறைந்தாய்
............................
கீர்த்தன அர்ச்சணா....
உன் நினைவுகளை
நாங்களும் மறக்காது
எங்கள் இதயபூர்வமான
கண்ணீர் அஞ்சலியை
மீண்டும் மீண்டும்
செய்கின்றோம்....
கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,
தீயென தன் உடலுக்கு
தீயிட்டு
புறப்பட்டாள் எட்டுத்திக்கும்
சுட்டெரிக்கும் தீயென
பெண் மங்கை!
நம்விடுதலை காற்றை
அவள் சுவாசித்தால்
மென்மை பாறையாய்
உறையா வெண் குருதியில்
தன்னுடல் நனைத்து புறப்பட்டாள்
பெண்மங்கை!
.jpg)
தன் திறமை தனை தான் நம்பி
உலகிற்கு தன் வீரம் சொல்லி
தன் உறவிற்காய் கை கொடுத்தாள்
பெண் மங்கை!
தன் உயிரை துச்சமாய் எண்ணி
இரவு பகல் தனை மறந்து
பொன்மலர் தீக்குள் ஒளியா
ஈழத்துமண்ணில் விழ்ந்திட்டாள்
பெண்மங்கையாய்!
வித்துடல்கள் வீதியில்
மரணத்தின் தூய்மையால் எம்மிடம்
சொல்லாமல் சொல்லியது
அவர்களே !சிகப்பு மலர்களென்று
தீயிட்டு
புறப்பட்டாள் எட்டுத்திக்கும்
சுட்டெரிக்கும் தீயென
பெண் மங்கை!
நம்விடுதலை காற்றை
அவள் சுவாசித்தால்
மென்மை பாறையாய்
உறையா வெண் குருதியில்
தன்னுடல் நனைத்து புறப்பட்டாள்
பெண்மங்கை!
.jpg)
தன் திறமை தனை தான் நம்பி
உலகிற்கு தன் வீரம் சொல்லி
தன் உறவிற்காய் கை கொடுத்தாள்
பெண் மங்கை!
தன் உயிரை துச்சமாய் எண்ணி
இரவு பகல் தனை மறந்து
பொன்மலர் தீக்குள் ஒளியா
ஈழத்துமண்ணில் விழ்ந்திட்டாள்
பெண்மங்கையாய்!
வித்துடல்கள் வீதியில்
மரணத்தின் தூய்மையால் எம்மிடம்
சொல்லாமல் சொல்லியது
அவர்களே !சிகப்பு மலர்களென்று
Tuesday, 17 July 2007
கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,
தன்னுடல் சிதறிட
தேசமெங்கும் கலந்திட
மரணத்தை தன்னுடல்
சேர்த்து நடத்தனர்
மகிழ்ச்சி பூக்களாய்!
எம் விடுதலை காத்திட
எம் உயிர் காத்திட
தன் உயிர் தந்த
தோழர்கள்..!
மரணத்தை காதலித்து
தேசத்தை சுவாசித்து
கல்லறையை நேசித்து
எம்மிடம் சொல்லாமல்
சொல்லிச் சென்றவை
ஆயிரம்!
அதனால்! அஞ்சிய நான்
இன்று என் விழி
நீர் கொண்டு
செய்கின்றேன் அஞ்சலி
புனிதமாய் உதிர்ந்திட்ட
உயிர்களே உங்களுக்காய்....
தேசமெங்கும் கலந்திட
மரணத்தை தன்னுடல்
சேர்த்து நடத்தனர்
மகிழ்ச்சி பூக்களாய்!
எம் விடுதலை காத்திட
எம் உயிர் காத்திட
தன் உயிர் தந்த
தோழர்கள்..!
மரணத்தை காதலித்து
தேசத்தை சுவாசித்து
கல்லறையை நேசித்து
எம்மிடம் சொல்லாமல்
சொல்லிச் சென்றவை
ஆயிரம்!
அதனால்! அஞ்சிய நான்
இன்று என் விழி
நீர் கொண்டு
செய்கின்றேன் அஞ்சலி
புனிதமாய் உதிர்ந்திட்ட
உயிர்களே உங்களுக்காய்....
Monday, 16 July 2007
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
வறுமைப் பெண்ணின்
உணர்ச்சிகள்
உணர்ச்சிகள்
குடும்பச்சுமையிலும்
கூலி வேலையிலும்
கரைந்து போனதால்
சீதனச்சந்தையில்
அடிமாடாய் நின்ற
வறுமைப்பெண்
வந்து வந்து போகும்
ஆண்களை ஏக்கத்தோடு
பார்த்து சொன்னாள்..
இது
வறுமையின் குற்றமோ
ஆண்களின் குற்றமோ
இல்லை
பெண்களே !! பெண்களை
புரிந்து கொள்ளா குற்றமென்று
ஆனாலும்
பணக்கார விதவைப்
பெண்ணிற்காய் கண்ணீர்
விட்டாள்
மீண்டும திருமணம்
சந்தையில்
சீதனம்ப் பேச்சியில்
விலை மாடாய் அவள்
நிற்பதை பார்த்து
தன்
கண்ணீர் துடைக்க ஆண்
இல்லாத அவளைப்பெண்
அவளுக்காய் கண்ணீர்
விட்டாள்......
Sunday, 15 July 2007
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................
பாவப்பட்ட ஜென்மங்கள்
இருளும் வெளிச்சமும்
ஒன்றானாது இவர்களுக்கு
பகலில்
தீண்டப்படாத உறவுகளாய்..
இரவின் ஆசைக் கிளிகளாய்
வாழ்ந்ததிடும் இவர்களை
காரிஉமிழ்ந்து வசைபாடும்
உத்தமர்கள் ஆயிரம்!!
இருளும் வெளிச்சமும்
ஒன்றானாது இவர்களுக்கு
பகலில்
தீண்டப்படாத உறவுகளாய்..
இரவின் ஆசைக் கிளிகளாய்
வாழ்ந்ததிடும் இவர்களை
காரிஉமிழ்ந்து வசைபாடும்
உத்தமர்கள் ஆயிரம்!!
கொடுமை யிலும் கொடுமை
பகலில் மட்டுமே
இரவின் முதல் ரசிகனுமாய்
வாடிக்கையாளனுமாய்
முகமூடிதிருடனுமாய்
வாழ்பவர்கள் இவர்களோ
இந்த பாவப்படட
ஜென்மங்கள் தன்
உணர்ச்சிகள் விற்று
மரணத்தை தேடி
யாருக்காய் வாழ்கின்றனர்?
Saturday, 14 July 2007
கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,
தன் கணவன்
உயிரைக் காத்திட
முடியா..
கலியுகக் கண்ணகி
கண்மூடித்தூங்கி
பல நாட்களாச்சி!
வாகனத்தின் சத்தமெல்லாம
மரணத்தின் ஓசையாச்சி
பயந்து பயந்து பாதி உயிர்
அவளுக்கும் போயாச்சி!
இறந்திடாமல் நரகமும் சொர்க்கமும்
கண்முன்னே தோன்றலாச்சி!
போராடிப் போராடி
களைத்திட்ட அவளைத்தேடி
வெள்ளை வேணில் வந்தம்மா
விதவையென்னும் பட்டம் ஒன்று
யார் தடுத்தும் இறுதியில்
மாறிடாக்கோலம்
அவளுக்கும் சொந்தமாச்சி ...!
உயிரைக் காத்திட
முடியா..
கலியுகக் கண்ணகி
கண்மூடித்தூங்கி
பல நாட்களாச்சி!
வாகனத்தின் சத்தமெல்லாமமரணத்தின் ஓசையாச்சி
பயந்து பயந்து பாதி உயிர்
அவளுக்கும் போயாச்சி!
இறந்திடாமல் நரகமும் சொர்க்கமும்
கண்முன்னே தோன்றலாச்சி!
போராடிப் போராடி
களைத்திட்ட அவளைத்தேடி
வெள்ளை வேணில் வந்தம்மா
விதவையென்னும் பட்டம் ஒன்று
யார் தடுத்தும் இறுதியில்
மாறிடாக்கோலம்
அவளுக்கும் சொந்தமாச்சி ...!
Thursday, 12 July 2007
யார் அவள்
வானமே இல்லாத நிலவாய்
தென்றலே தொடாத மலராய்
எழுதப்பட்ட புத்தகத்தில்
வர்ணிக்கப்படாத கவிதையாய்!
கண்களின் கண்ணீரைப் புரிந்து
கொள்ளா உறவுகளின்
சுமைதாங்கியாய்!
மூடநம்பிக்கையின் ஆணிவேரில்
தொலைந்து விட்ட சந்தோஷங்ககளாய்!
இரவின் வரவிற்காய் காத்திருக்கும்
அல்லிமலராய்!
கனவுக்குள் நிஜத்தை
தோடுபவளாய்!
தலையணைக்கு மட்டும்
தெரிந்த கண்ணீரின்
ஈரத்தை சொல்ல
யாருமில்லாதஅவள் யார்?
தென்றலே தொடாத மலராய்
எழுதப்பட்ட புத்தகத்தில்
வர்ணிக்கப்படாத கவிதையாய்!
கண்களின் கண்ணீரைப் புரிந்து
கொள்ளா உறவுகளின்
சுமைதாங்கியாய்!
மூடநம்பிக்கையின் ஆணிவேரில்
தொலைந்து விட்ட சந்தோஷங்ககளாய்!
இரவின் வரவிற்காய் காத்திருக்கும்
அல்லிமலராய்!
கனவுக்குள் நிஜத்தை
தோடுபவளாய்!
தலையணைக்கு மட்டும்
தெரிந்த கண்ணீரின்
ஈரத்தை சொல்ல
யாருமில்லாதஅவள் யார்?
என் விழிகளுக்குள் சிக்கிக்கொண்ட சாரல்...1

சிதைந்திடும் கோலத்தில்
கரைகின்ற கண் மையில்
வழிகின்ற விழிநீரை
ஏந்திடா தனிமைக்குள்
சமாதானத்தின் சின்னமாய்
தூய்மையின் சோகமாய்
வெள்ளை மலரொன்று.விடியா இரவுகளில்
தொலைந்திட்டாள்
ஏக்கங்களோடு
தன் மனதைப் புரியா
மனிதர்கள் சமாதனம்
வேண்டா தனிமைச் சிறைக்குள்
தூய்மை தேடினாள் தன் தூய்மை
சொல்ல...
**************************
பூவென்று பூக் கொண்டு
பூப் போல் பூமகனைத் தேடி
நதிமேல் நதியாய் நதிபோல்
நதி கடந்திடுது தனியாய்
வெண் முகத்தின் ஒளியால்
வெண்மேகம் ஒளிபெற்று
சிரிந்து வரவேற்க !
கரு கூந்தல் தொட்டதென்றல்
கருமேகம் கூட்டி சின்னத் துறல்
போட்டு வரவேற்க !
சின்ன வேர்வைப் புள்ளி
தொட்ட துறல் பட்டுச் சிவந்த பெண்னைப்போல்
சூரியன் வந்து வரவேற்க!
வந்த சூரியன்ப்பார்வையால்
கொண்டநாணப் பெண்மைபோல்
வானவில் வந்து வரவேற்க!
மெல்ல விரிந்த பூக்கொண்டு
வானவில் வர்ணமாய் மெல்ல போகின்றாள்
பூமகனைத் தேடி......
*****************************
வாழ்ந்த நாட்கள்
இனிமை சொல்ல
உண்மை பாசம் தாம்
கொண்டு !இணைந்த
இதயக் காதலால்
போகும் நாட்கள் தனை
மறந்து! முதுமைக் காலத்து
இளமை நினைவில் மயங்கி
நிக்கின்றது முதுமை இங்கே
************************************
வெள்ளைப் பனிச்சாரல்
பூமி நனைக்க, நனைந்த
பூமி குளிரில் தவிக்க!
உருகிய பனி கண்டு ,
என் மலர் சிரிக்க!
சிரிக்கும் மலர்கண்டு நான் சிரிக்க
எனை பார்த்து என் இதயம்
சிரிந்ததுமெல்ல .....................
********************************
சிந்திய சிரிப்பொலியும்
பேசிய வார்த்தையும்
நித்தமும் என் காதில்
ஒலிக்க..
அவளோ சித்திரமாய்
சுவரில் தொங்கி
நித்தம் நித்தம் என்னை
நித்திரையின்றி தவிக்க விட்டு
அழகாய் சிரிக்கின்றாள்
என் நினைவோடு
எத்தனை எத்தனையோ
கற்பனைகளை என்னோடு
நித்திரையின்றி சொல்லி விட்டு
அத்தனை கனவையும் என்னிடம்
விட்டு சித்திரமாய் சிரிக்கின்றாள்
என் உயிரோடு
நித்தம் நித்தம் என் இதயம்
துடிக்க மறுத்தது அவள்
கன்னக்குழி சிரிப்பழகை
காணாது
எத்தனை எத்தனை கொடுமைகள்
வாழ்கையோடு வந்தாலும்
கண்மணியே!! உன்னை இழப்பது
போல் கொடுமை வேண்டாம்
இந்த பூமியில் எனி...............
*********************************
அழகு காதல் தான்
சேர
உணர்ச்சி தடுமாற்றம்
கூட்டுச் சேர
தப்பு தப்பில்லா சரியில்
ஒன்று சேர
கூடியவன் கூடுவிட்டு
தான் போக
பெண்மையின் தாய்மை
அதில் சேர
கற்பத்தில் கரு சேர
பத்து மாதம் சுமை சேர
சிற்றெறும்பு காட்டு
மரப்பொத்தில் சிசு சேர
நெஞ்சில் பால் சுறக்கா
பெண்மை தன் மானம்
காக்க
எறிந்தால் மொட்டு ஒன்றை
சித்தெறும்பின் காவலில்......
******************************

இதயங்கள் இரண்டும்
ஒன்றோடு ஒன்று
காதல் கொண்டு
தாயாய் சேயும்
சேயாய் தாயும்
மாறி மாறி
இன்பக் கனவைச்சொல்லி
இந்த உலகம் தாம் மறந்து
புதிய உலகம் தாம் கண்டு
வாழ்கின்றது வாழ்கையொன்று
*********************************
******************************
அறியா மனிதன்
அழிவு நிறுத்தி
அதிகார வர்க்கம்
தனை மாற்றி
கருவறை முதல்
கல்லறை வரை
உயிரின் உரிமை
தனை இழந்து தவிக்கும்
உறவிற்காய்......
பூப்பறிக்கா கைகள்
பூவேந்தி வருகின்றது
இறைவா உன்னிடத்தில்
பசியில்லா தவிப்பில்லா
உயிரின் வாழ்விற்காய்...
பூப் போல் பூமகனைத் தேடி
நதிமேல் நதியாய் நதிபோல்
நதி கடந்திடுது தனியாய்
வெண் முகத்தின் ஒளியால்
வெண்மேகம் ஒளிபெற்று
சிரிந்து வரவேற்க !
கரு கூந்தல் தொட்டதென்றல்
கருமேகம் கூட்டி சின்னத் துறல்
போட்டு வரவேற்க !
சின்ன வேர்வைப் புள்ளி
தொட்ட துறல் பட்டுச் சிவந்த பெண்னைப்போல்
சூரியன் வந்து வரவேற்க!
வந்த சூரியன்ப்பார்வையால்
கொண்டநாணப் பெண்மைபோல்
வானவில் வந்து வரவேற்க!
மெல்ல விரிந்த பூக்கொண்டு
வானவில் வர்ணமாய் மெல்ல போகின்றாள்
பூமகனைத் தேடி......
*****************************
வாழ்ந்த நாட்கள்இனிமை சொல்ல
உண்மை பாசம் தாம்
கொண்டு !இணைந்த
இதயக் காதலால்
போகும் நாட்கள் தனை
மறந்து! முதுமைக் காலத்து
இளமை நினைவில் மயங்கி
நிக்கின்றது முதுமை இங்கே
************************************
வெள்ளைப் பனிச்சாரல்பூமி நனைக்க, நனைந்த
தவிக்கும் பூமியியோடு
முதுமை துடிக்க!
துடிக்கும் முதுமையின்
உணர்வின்றி குழந்தைகள்
குதிக்க! குதிக்கும் குழந்தையாய்
விரிந்திடும் மலர்களைகுதிக்க! குதிக்கும் குழந்தையாய்
மூடிய பனிக்குள் இதழ் நடுங்க!
நடுங்கும் மலர் கண்டு நான் வாட
வாடிய எனைப் பார்த்து
என் இதயம் துடிக்க!வாடிய எனைப் பார்த்து
துடிக்கும் எமைப் பார்த்து
சூரியன் சிரிக்க! சிரிந்த சூரியன்
சிந்திய வெப்பத்தில் வெண்பனிஉருக!உருகிய பனி கண்டு ,
என் மலர் சிரிக்க!
சிரிக்கும் மலர்கண்டு நான் சிரிக்க
எனை பார்த்து என் இதயம்
சிரிந்ததுமெல்ல .....................
வெள்ளிநிலவென்று
இருண்ட வாழ்வின்
இருள் போக்க
இருண்ட வாழ்வின்
இருள் போக்க
மென்கரத்தால் ஒளியெடுத்து
இல்லமெங்கும் ஒளிர்கின்றாள்
புதிய காற்றின் வாசமாய்..
***********************************
சலனமில்லா இதயமென்று
உயிர் ஓவியமானதால்
பார்வைகள் பல சொல்ல
புரியா மனிதர்கள் பார்வையின்
நிலை கண்டு! இருளோடு
ஒர் சிறை தான் கொண்டு
இருண்ட வானத்தின்
***********************************
சலனமில்லா இதயமென்றுஉயிர் ஓவியமானதால்
பார்வைகள் பல சொல்ல
புரியா மனிதர்கள் பார்வையின்
நிலை கண்டு! இருளோடு
ஒர் சிறை தான் கொண்டு
இருண்ட வானத்தின்
நச்சத்திரத்திலும் நிலவிலும்
உறவின் முகம் கண்டு
பூவின் சிரிப்பில் தனை
மறந்து ,உரிமையோடு
உலமை ரசித்திட !
தப்பான தப்பு
தப்பாய் தவறி விழ
புரிந்தது அவளுக்கு
உறவின் முகம் கண்டு
பூவின் சிரிப்பில் தனை
மறந்து ,உரிமையோடு
உலமை ரசித்திட !
தப்பான தப்பு
தப்பாய் தவறி விழ
புரிந்தது அவளுக்கு
உண்மை உலகம்....
*********************************
இழந்த வலி தனை மறக்க
கல்லறைப் பூவென்று
கருவறை விதியால்
வாசமின்றி விசியது
வர்ணப்பூக்களின் முகம்
போல.....
காயம் தந்த கண்ணீர்
காலமும் மற்றிடா கோலம்
நிலையாக்கொண்டதால்
இப்போ! தவிக்கின்றாள் தன் நிலை
கண்டு................
ஏந்திய கையுக்குள்
ஓர் கை
இணையத் துடிக்கின்றது
சமாதானத்தைப் போல்
எட்ட நின்றே...
*********************************
இழந்த வலி தனை மறக்ககல்லறைப் பூவென்று
கருவறை விதியால்
வாசமின்றி விசியது
வர்ணப்பூக்களின் முகம்
போல.....
காயம் தந்த கண்ணீர்
காலமும் மற்றிடா கோலம்
நிலையாக்கொண்டதால்
இப்போ! தவிக்கின்றாள் தன் நிலை
கண்டு................
ஏந்திய கையுக்குள்ஓர் கை
இணையத் துடிக்கின்றது
சமாதானத்தைப் போல்
எட்ட நின்றே...
********************************
சிந்திய சிரிப்பொலியும்பேசிய வார்த்தையும்
நித்தமும் என் காதில்
ஒலிக்க..
அவளோ சித்திரமாய்
சுவரில் தொங்கி
நித்தம் நித்தம் என்னை
நித்திரையின்றி தவிக்க விட்டு
அழகாய் சிரிக்கின்றாள்
என் நினைவோடு
எத்தனை எத்தனையோ
கற்பனைகளை என்னோடு
நித்திரையின்றி சொல்லி விட்டு
அத்தனை கனவையும் என்னிடம்
விட்டு சித்திரமாய் சிரிக்கின்றாள்
என் உயிரோடு
நித்தம் நித்தம் என் இதயம்
துடிக்க மறுத்தது அவள்
கன்னக்குழி சிரிப்பழகை
காணாது
எத்தனை எத்தனை கொடுமைகள்
வாழ்கையோடு வந்தாலும்
கண்மணியே!! உன்னை இழப்பது
போல் கொடுமை வேண்டாம்
இந்த பூமியில் எனி...............
*********************************
அழகு காதல் தான்சேர
உணர்ச்சி தடுமாற்றம்
கூட்டுச் சேர
தப்பு தப்பில்லா சரியில்
ஒன்று சேர
கூடியவன் கூடுவிட்டு
தான் போக
பெண்மையின் தாய்மை
அதில் சேர
கற்பத்தில் கரு சேர
பத்து மாதம் சுமை சேர
சிற்றெறும்பு காட்டு
மரப்பொத்தில் சிசு சேர
நெஞ்சில் பால் சுறக்கா
பெண்மை தன் மானம்
காக்க
எறிந்தால் மொட்டு ஒன்றை
சித்தெறும்பின் காவலில்......
******************************

இதயங்கள் இரண்டும்
ஒன்றோடு ஒன்று
காதல் கொண்டு
தாயாய் சேயும்
சேயாய் தாயும்
மாறி மாறி
இன்பக் கனவைச்சொல்லி
இந்த உலகம் தாம் மறந்து
புதிய உலகம் தாம் கண்டு
வாழ்கின்றது வாழ்கையொன்று
*********************************
******************************
அறியா மனிதன்அழிவு நிறுத்தி
அதிகார வர்க்கம்
தனை மாற்றி
கருவறை முதல்
கல்லறை வரை
உயிரின் உரிமை
தனை இழந்து தவிக்கும்
உறவிற்காய்......
பூப்பறிக்கா கைகள்
பூவேந்தி வருகின்றது
இறைவா உன்னிடத்தில்
பசியில்லா தவிப்பில்லா
உயிரின் வாழ்விற்காய்...
Wednesday, 11 July 2007
கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,
எம் இனத்தின் உயிர்குடித்து
குருதி தனில் நீ
நனைந்தும் அடங்கிடாத
உன் தாகம்
இன்னும் தொடர்கின்றது தொடர்
கதையாய்!!
வருடத்தில் ஒரு
முறை நீ தோன்றினாய்
எம் இனத்திற்கோ
பல முறையேன்வந்தாய்?
சின்ன உயிர் தனைக்
கொள்ள எத்தனை
பெரிய ஆயுதங்கள்
பாசத்தைச் சொன்ன
இதயங்கள் கருகிய
கோலங்கள் கண்முன்னே
பார்த்துப் பார்த்து அழுதிட்டோம்
கண்ணிருந்த கோழைகளைாய்!!
ஆனாலும்! நாம்
இன்னும் கரைகின்றோம்
குருதியில்
விடுதலைத் தீயில் எரிந்திட்டாலும்
எம் கண்முன்னே நிழலாய்
உன் சோகங்கள் மாற்ற முடியா
வலிகளாய்!
யாரிடம் சொல்வது நாம்
மனிதனுக்குள் மாறுபட்ட உயிர்களான
கதை...?
குருதி தனில் நீ
நனைந்தும் அடங்கிடாத
உன் தாகம்
இன்னும் தொடர்கின்றது தொடர்
கதையாய்!!
வருடத்தில் ஒரு
முறை நீ தோன்றினாய்
எம் இனத்திற்கோபல முறையேன்வந்தாய்?
சின்ன உயிர் தனைக்
கொள்ள எத்தனை
பெரிய ஆயுதங்கள்
பாசத்தைச் சொன்ன
இதயங்கள் கருகிய
கோலங்கள் கண்முன்னே
பார்த்துப் பார்த்து அழுதிட்டோம்
கண்ணிருந்த கோழைகளைாய்!!
ஆனாலும்! நாம்
இன்னும் கரைகின்றோம்
குருதியில்
விடுதலைத் தீயில் எரிந்திட்டாலும்
எம் கண்முன்னே நிழலாய்
உன் சோகங்கள் மாற்ற முடியா
வலிகளாய்!
யாரிடம் சொல்வது நாம்
மனிதனுக்குள் மாறுபட்ட உயிர்களான
கதை...?
Tuesday, 10 July 2007
ஹைக்கூ... கவிதைகள்
தாய்யூட்டிய பால்
அவள் இனத்தை அழித்தது
ஆணாதிக்கம்!!!
*******
காதல் பைத்தியத்திற்கு
வைத்தியம் செய்தது பாசம்!!!
*******
காதல் பைத்தியத்திற்கு
வைத்தியம் செய்தது பாசம்!!!
*********
அழகிற்க்காய் ஆடைகிழிப்பு
வறுமையாடைதேடித்தவிப்பதோ
அழகிற்க்காய் ஆடைகிழிப்பு
வறுமையாடைதேடித்தவிப்பதோ
நூல்!!
*********
தனிமை சிரிப்பில் உரிமைப் போராட்டம்
குடும்பசிதைவை!!
*********
பொய்யான முகங்களால்
பரீட்சைவந்தது மூகமுடிக்கு!!
*********
என் கணவனுக்கு எல்லாம் நானென்றாள்
உணர்ச்சியை விற்று!!!
*********
பெண்விடுதலைக்காய்கருந்து
பெண்விடுதலைக்காய்கருந்து
சொன்னான்வீட்டிலோ
பெரியபூட்டு!!
*********
ஆடம்பர வாழ்கை வெள்ளித்தட்டில்
பிச்சையெடுக்கின்றது
பாசம்!!
*********
சீதனச்சண்டையில் இருவர்
பாடோ பெரும்பாடு போலிமுகம்!!
*********
முகம் தெரியா முகவரியில்
உணர்ச்சித் தடுமாற்றம்
நட்பு !!
*********
கல்லறைக்கல்லுக்குள்
நம் உணர்ப்போராட்டம்
வாழ்கை
*********
நீ சாதிக்க கனவு
என் கனவின் சாதனை
*********
சீதனச்சண்டையில் இருவர்
பாடோ பெரும்பாடு போலிமுகம்!!
*********
முகம் தெரியா முகவரியில்
உணர்ச்சித் தடுமாற்றம்
நட்பு !!
*********
கல்லறைக்கல்லுக்குள்
நம் உணர்ப்போராட்டம்
வாழ்கை
*********
நீ சாதிக்க கனவு
என் கனவின் சாதனை
கண்ணீர் !!
*********
திருமணச் சந்தையில்
மீண்டும் பத்துப்பொருந்தம்
*********
திருமணச் சந்தையில்
மீண்டும் பத்துப்பொருந்தம்
மறுமணம்!!!
*********
பெற்றோர்கள் பிரிவுக்குள்
பிள்ளைகள் தூது !நாளைய
வாழ்க்கைப்பாடம் !!
***************************
காலத்தின் மாற்றம் வேடங்களில்
*********
பெற்றோர்கள் பிரிவுக்குள்
பிள்ளைகள் தூது !நாளைய
வாழ்க்கைப்பாடம் !!
***************************
காலத்தின் மாற்றம் வேடங்களில்
வில்லத்தனம் வில்லியானது!!!
****************************
இன்றைய நட்பின் தேடலால்
நீ நாளை யாரோவானாய்
நட்பின் ஆழம்
*************************
என் இதயம் வலிக்குள் நீ
இன்றைய நட்பின் தேடலால்
நீ நாளை யாரோவானாய்
நட்பின் ஆழம்
*************************
என் இதயம் வலிக்குள் நீ
தொல்லையானாய் நினைவுகள்!
***********************
மொழியும் ஊமை
உன்னைப் போல் மெளனம்.........
**********************
அம்மா திண்டாட மது
***********************
மொழியும் ஊமை
உன்னைப் போல் மெளனம்.........
**********************
அம்மா திண்டாட மது
கொண்டாட மகளுக்குப்பிறந்தநாள்
************************
தொடர்களின் சோகத்தால்
அழுதழு ஓய்ந்தாள் சின்னத்தொடர்
***************************
ரசிகன் ரசினை தொலைத்தான்
காதலால் !!
தொடர்களின் சோகத்தால்
அழுதழு ஓய்ந்தாள் சின்னத்தொடர்
***************************
ரசிகன் ரசினை தொலைத்தான்
காதலால் !!
கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,
ஈழமாம் எம் நாட்டில்
வாழ்வதற்கு வழியின்றி
உண்பதற்கு உணவின்றி
அலை பாயும் எம் இனத்தை
கரை சேர்க்க யார் வருவார்?
வேதனையில் எம்மவர்கள்
துடிதுடிக்கும் காட்சியினை
பார்ப்பதற்கு கண்ணுண்டா?
கொடுமைகளைக் கேட்பதற்குக்
செவியுண்டா? இதனை
கூறுவதற்கு யார் வருவார்?
நீதிகள் வெந்த பின்னர்
சுடர் விடும் அநீதிகளால்
எரிகின்ற ஈழத்தை
அனைத்தெடுக்க இங்கே
யார் வருவார்?
இதயங்கள் காணுகின்ற
இன்பக்களை வென்றிட முடியாமல்
இருள் தனில் தவிக்குதையா
ஒளியின்றி எம் இனம் இம்மினதிற்காய்
ஒளியினை ஏற்றி வைக்கயார் வருவார்?
வாழ்வதற்கு வழியின்றி
உண்பதற்கு உணவின்றி
அலை பாயும் எம் இனத்தை
கரை சேர்க்க யார் வருவார்?
வேதனையில் எம்மவர்கள்
துடிதுடிக்கும் காட்சியினை
பார்ப்பதற்கு கண்ணுண்டா?கொடுமைகளைக் கேட்பதற்குக்
செவியுண்டா? இதனை
கூறுவதற்கு யார் வருவார்?
நீதிகள் வெந்த பின்னர்
சுடர் விடும் அநீதிகளால்
எரிகின்ற ஈழத்தை
அனைத்தெடுக்க இங்கே
யார் வருவார்?
இதயங்கள் காணுகின்ற
இன்பக்களை வென்றிட முடியாமல்
இருள் தனில் தவிக்குதையா
ஒளியின்றி எம் இனம் இம்மினதிற்காய்
ஒளியினை ஏற்றி வைக்கயார் வருவார்?
Sunday, 8 July 2007
புரியவில்லை
எம் உணர்ச்சிகள் எமக்கு புரிந்தாலும்
புரியாத வாழ்கை தனில்
புரியாத பயணங்கள் சில...
கணவனயாய் மனைவியாய்
ஒன்றுக்குள் ஒன்றாய்
உயிர்களாய் பிள்ளைகள்
எம்மோடு வாழ்ந்திட்டாலும்!!
ஏனோ புரியாத சண்டை ஒன்று
தொடரான தொடர்கதையாய்
எம்மோடு !!
அண்ணனாய் அக்காவாய்
தங்கையாய் தம்பியாய்
பாசத்தின் உறவிற்குள் உறவாய்
நாம் வாழ்ந்தபோதும்!! ஏனோ
உரிமைக்காய் சண்டை ஒன்று
எம்மோடு !!
சண்டைகள் சண்டைபோட்டு
எதிர்ப்புக்குள் எதிர்ப்பாய் நின்று
பிடிப்போ இல்லா வாழ்கை ஒன்றும்
பிடிப்போ இல்லாமல் எம்மோடு தோன்ற
சீதனசந்தையில் பெண்னேடு பென்னும்
பொருளோடு பணமும் விழ்ந்திடா
திருமண வாழ்வின் விழ்ந்திட பயணத்தின்
வீண் வம்பின் உணர்ச்சி தான் ஏன்?
புரியாத வாழ்கை தனில்
புரியாத பயணங்கள் சில...
கணவனயாய் மனைவியாய்
ஒன்றுக்குள் ஒன்றாய்
உயிர்களாய் பிள்ளைகள்
எம்மோடு வாழ்ந்திட்டாலும்!!
ஏனோ புரியாத சண்டை ஒன்று
தொடரான தொடர்கதையாய்
எம்மோடு !!
அண்ணனாய் அக்காவாய்
தங்கையாய் தம்பியாய்
பாசத்தின் உறவிற்குள் உறவாய்
நாம் வாழ்ந்தபோதும்!! ஏனோ
உரிமைக்காய் சண்டை ஒன்று
எம்மோடு !!
சண்டைகள் சண்டைபோட்டு
எதிர்ப்புக்குள் எதிர்ப்பாய் நின்று
பிடிப்போ இல்லா வாழ்கை ஒன்றும்
பிடிப்போ இல்லாமல் எம்மோடு தோன்ற
சீதனசந்தையில் பெண்னேடு பென்னும்
பொருளோடு பணமும் விழ்ந்திடா
திருமண வாழ்வின் விழ்ந்திட பயணத்தின்
வீண் வம்பின் உணர்ச்சி தான் ஏன்?
Saturday, 7 July 2007
மனம்
என்னை சிறையில்
அடைத்து விட்டு
போலியான வாழ்கை
எதற்கு மனிதா_ நீ
சொல்லு கொஞ்சம்
அப்பப்பா!! எந்தனை வேஷங்கள்
நீ போட்டு மற்றவர் துயர்
ரசிக்கின்றாய்
என்னை நீ மறந்து
மிருகமாய் நீ மாறி
உன்னை நீ அழிந்து
உன் வாழ்கை அழிவது
அறியாமல் தவிக்கின்றாயே மனிதா?
ஏன் மனிதா? உன்னிடம்
நான் சிறையிருப்பதை
மறந்து போனாய்
உனக்காய என்னை
ஒரு தரம் திறந்துபாரேன்!!
அடைத்து விட்டு
போலியான வாழ்கை
எதற்கு மனிதா_ நீ
சொல்லு கொஞ்சம்
அப்பப்பா!! எந்தனை வேஷங்கள்
நீ போட்டு மற்றவர் துயர்
ரசிக்கின்றாய்
என்னை நீ மறந்து
மிருகமாய் நீ மாறி
உன்னை நீ அழிந்து
உன் வாழ்கை அழிவது
அறியாமல் தவிக்கின்றாயே மனிதா?
ஏன் மனிதா? உன்னிடம்
நான் சிறையிருப்பதை
மறந்து போனாய்
உனக்காய என்னை
ஒரு தரம் திறந்துபாரேன்!!
Thursday, 5 July 2007
என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,
விதி
அன்னை மடிதொட்டு
தந்தை கரம்தொட்டு
மாமன் உறவைத் தொட்டு
மாமியின் பாசம் தொட் டதால்
அன்பே உன்னைத் தொட்டு
மழலைகள் வாழ்வைத்தொட்டு
சொர்கம் என்னைத்தொடசோதனை நமைத்தொட்டு
இறப்புகள் வாழ்வைத்தொட்டு
பிரிவுகள் எனைத் தொட்டதால்
இதயம்வ லியைத்தொட்டு
கண்கள் நீரைத்தொட்டு
கவிதை சோகம் தொட்டு
தவிப்புகள் எனைத்தொட்டு
துடிக்கின்றேன் உன்னால்
இதுதான் விதியா?
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
இயற்கையால் இணைந்த
அழகிய வாழ்கைத் தோட்டத்தில்
ஒன்றோடு ஒன்றாய் உறவு கொண்டு
வாழும் நாம் இங்கே
எப்போது சிந்திப்போம் !!
பட்டிமன்றம் போட்டு
வாதிட்டு வாதிட்டு களைத்தே
விட்டோம் ஆனாலும்
தீர்ப்புகள் மட்டும் மாறி மாறி
வந்து போக இருட்டுக்குள் நின்று
கொண்டு வெளிச்சத்தில்
தவிக்கும் எம் அறிவுக்கண்
எப்போது தான் திறக்கும் இங்கே
தப்புகள் வரும்போது
நீயா? நானா? என
சண்டை போடும் நாம்
எற்றுக் கொள்வோமா?
அழகா வாழ்கை நாம்
இருவரும் சேர்வதில்
தான் என்று......
அழகிய வாழ்கைத் தோட்டத்தில்
ஒன்றோடு ஒன்றாய் உறவு கொண்டு
வாழும் நாம் இங்கே
எப்போது சிந்திப்போம் !!
பட்டிமன்றம் போட்டு
வாதிட்டு வாதிட்டு களைத்தே
விட்டோம் ஆனாலும்
தீர்ப்புகள் மட்டும் மாறி மாறி
வந்து போக இருட்டுக்குள் நின்று
கொண்டு வெளிச்சத்தில்
தவிக்கும் எம் அறிவுக்கண்
எப்போது தான் திறக்கும் இங்கே
தப்புகள் வரும்போது
நீயா? நானா? என
சண்டை போடும் நாம்
எற்றுக் கொள்வோமா?
அழகா வாழ்கை நாம்
இருவரும் சேர்வதில்
தான் என்று......
தொலைபேசி
என்னைத் தொட்ட சோகங்கள்
இது வரை தொட்டதுண்டா
யாரையும்?கண்ணீரில் கரைகின்ற
பல கதை நான் கேட்டு
என்னை நானே நொந்து கொள்ள!
இது வரை தொட்டதுண்டா
யாரையும்?கண்ணீரில் கரைகின்ற
பல கதை நான் கேட்டு
என்னை நானே நொந்து கொள்ள!
உறவினைத் தேடும் உறவுகள்
என்னோடு உறவாகி உறவுகொள்ள!
என்னோடு உறவாகி உறவுகொள்ள!
பாசம் தனைத்தேடித்தேடி என்னோடு
அடைக்கலமான குழந்தைகள்
ஆறுதல் தேடிப் பாசம் கொள்ள!
அடைக்கலமான குழந்தைகள்
ஆறுதல் தேடிப் பாசம் கொள்ள!
பிரிவின் துயரால் இதயத்தடிப்பாய் துடிக்கும்
காதல் நெஞ்சங்கள் என்னோடு
கொஞ்சிப் பேச! கொஞ்சும் இவர்களின்
வலிதனை சொல்ல வார்தையின்றி
நான் மௌமாய் தவிக்க!
தவிக்கம் என்னோடு
காதல் நெஞ்சங்கள் என்னோடு
கொஞ்சிப் பேச! கொஞ்சும் இவர்களின்
வலிதனை சொல்ல வார்தையின்றி
நான் மௌமாய் தவிக்க!
தவிக்கம் என்னோடு
இயந்திர வாழ்கையில் தொலைத்த
மகிழ்ச்சியை கணவனும் மனைவியும்
மகிழ்ச்சியை கணவனும் மனைவியும்
என்னை அணைத்து தேடிக்கொள்ள
காத்திருகு்கம் நேரத்தின்
வலியினைச்சொல்ல வார்தையின்றி
நான் தவிக்க,தவிக்கும்
என்னையும் வம்பிலுத்து வம்பில்
காத்திருகு்கம் நேரத்தின்
வலியினைச்சொல்ல வார்தையின்றி
நான் தவிக்க,தவிக்கும்
என்னையும் வம்பிலுத்து வம்பில்
மாட்டி விடும் வாலிப நெஞ்சங்களோ
உங்களை என்ன சொல்லி நான் திட்ட
உங்களை என்ன சொல்லி நான் திட்ட
தேடலால் வந்தசாரல்.....,
எங்குமில்லா சொர்க்கத்தை
சாட்சி வைத்து!
பத்துப்பொருத்தம் தனைப்பார்த்து
சாதி மதம் கூடி வர
நட்சத்திரம் சேர்ந்து விட
காசு பொருள் ஒத்து வர
இருகுறிப்புகளின் சங்கமத்தில்
தெரியா இதயங்களை
புரியாக் காரணத்தால் தெரிந்தும்
இணைந்து விதியென்னும் மதியை
சதியால் வென்றிடச் சொல்வதா
திருமணம்?
இல்லையே...இரு உணர்வு
ஒன்றான இரு இதயங்களின்
நீண்ட நாள் கனவுகள் தானே.....
சாட்சி வைத்து!
பத்துப்பொருத்தம் தனைப்பார்த்து
சாதி மதம் கூடி வர
நட்சத்திரம் சேர்ந்து விடகாசு பொருள் ஒத்து வர
இருகுறிப்புகளின் சங்கமத்தில்
தெரியா இதயங்களை
புரியாக் காரணத்தால் தெரிந்தும்
இணைந்து விதியென்னும் மதியை
சதியால் வென்றிடச் சொல்வதா
திருமணம்?
இல்லையே...இரு உணர்வு
ஒன்றான இரு இதயங்களின்
நீண்ட நாள் கனவுகள் தானே.....
தேடலால் வந்தசாரல்.....,
காவியக்காதல் முதல்
கலியுகக் காதல்வரை
இதிகாசம் முதல் இலக்கியம் வரை
கனவுமுதல் கற்பனைவரை
அப்பப்பா!!
பெண்கள்பாடே பெரும் பாடு
ஆதி முதல் அந்தம்வரை
அந்தனையும் சிந்தைக்குள்
கோலம் போட !
காலை முதல் இரவு வரை
மங்கையிவளை எண்ணிக்கொண்டு
அலங்கோல பொம்மையாக்கி
எதற்காய் இத்தனை ஆர்ப்பாட்டம்
பிரிகாசம்!!
மாற்றங்களின்றி மாற்றமேயில்லாது
இவர்கள் வாழ்வதற்கு
அதிசயப் பிறவிகளா?இல்லை
உணர்ச்சியற்ற ஜடங்களா?
எதற்க்காய் இத்த வெறுப்பு
உங்களுக்கு இவர்கள் மீது..............
கலியுகக் காதல்வரை
இதிகாசம் முதல் இலக்கியம் வரை
கனவுமுதல் கற்பனைவரை
அப்பப்பா!!
பெண்கள்பாடே பெரும் பாடு
ஆதி முதல் அந்தம்வரை
அந்தனையும் சிந்தைக்குள்
கோலம் போட !
காலை முதல் இரவு வரை
மங்கையிவளை எண்ணிக்கொண்டு
அலங்கோல பொம்மையாக்கி
எதற்காய் இத்தனை ஆர்ப்பாட்டம்
பிரிகாசம்!!
மாற்றங்களின்றி மாற்றமேயில்லாது
இவர்கள் வாழ்வதற்கு
அதிசயப் பிறவிகளா?இல்லை
உணர்ச்சியற்ற ஜடங்களா?
எதற்க்காய் இத்த வெறுப்பு
உங்களுக்கு இவர்கள் மீது..............
என் உயிர்ச் சாரல்............,
பூவுக்குள் பூவாய்
பூமகள் இவள் உறங்க!
பாசத்தோடு உறவுகள்
கண்ணீர் சிந்தி சுற்றி நிற்க!!
இவளையும் வெறுத்திடும்
சில இதயங்கள் பெருமூச்சு
விட்டு நிற்க
ஏனடா சந்தித்தோம்
இவளை என
சிலர் திட்டி நிற்கஇவள் மட்டும்
பூவோடு பூவாய் வாடாது
உறங்கிக் கொண்டு!
தன் இறுதி
விடுதலைப் பயணத்தில்
மலர்ந்த மகிழ்ச்சிப் பூவாய்யாகின்றாள்
இன்று
இவளுக்காய் அழுதிடும்
உறவுகள் மறந்திடுவார்
மரணத்தை மீண்டும் நாளை!!!
Sunday, 1 July 2007
குட்டிக்குட்டிச் சாரல்......,
எனக்கே தெரியாது

நீ விரித்த வலையில்
புள்ளி மானாய் நான்
இரையாக நீயெடுத்து
ருசித்து விட்டாய்
விதியென நான் அழுகின்றேன்
சதியென தெரியாது....

நீ விரித்த வலையில்
புள்ளி மானாய் நான்
இரையாக நீயெடுத்து
ருசித்து விட்டாய்
விதியென நான் அழுகின்றேன்
சதியென தெரியாது....
************************
********************
சுகந்திரக் காற்றை
மட்டும் சுவாசிக்கு சிந்தனை
வானம்பாடி இவள் வாழ்கை
இவள் மனதிற்கு மட்டுமே
சிறைக்கதவுகளை இட்டுக்கொண்டாள்!!
*********************
*****************
**************************
****************************
************************
என்னைத் தொலைத்து
உன்னைக் கண்டு
நீயென நான் மாறியதால்!!
இப்போ நீயும் நானும்
ஒன்றானோம்!!!
*************************
தன்னிடம் தொலைத்து
பிறரிடம் தேடி
காலத்தை கரைத்து
காவியம் வரைத்தது
ஒர் கனவு.........
*********************
என்னால் முடியாது உன்னை

மறந்து வாழ !ஆனால்
முடியும் உன்னை
மறந்தும் வாழ என்னாலும்
என் பலகினத்தை நான் பாதையின்
படியாக்கும் போது1!!
***************************
என்னை அவன்
புரிந்து கொள்ள
அவனுக்கு தேவைப்பட்டது
இன்னுமோர் உறவு.....
***************************
துயரத்தில் என் உருவம்
பல கோணத்தைக் காட்ட
அதைப் பார்த்த விம்பம்
அழுகின்றது தனியே..
**********************
உறவே உன்மொழி மெளனம்
என் மொழி வேதனை
நம் மொழி என்ன?
************************
உன்னேடும் என்னேடும்
வாழும் சில கால சொந்தம்
உன்னையும் என்னையும்
எல்லையின்றி தொட்டு
சொல்லுது காலத்தின் பாதை
என்னைத் தொலைத்து
உன்னைக் கண்டு
நீயென நான் மாறியதால்!!
இப்போ நீயும் நானும்
ஒன்றானோம்!!!
*************************
தன்னிடம் தொலைத்து
பிறரிடம் தேடிகாலத்தை கரைத்து
காவியம் வரைத்தது
ஒர் கனவு.........
*********************
என்னால் முடியாது உன்னை

மறந்து வாழ !ஆனால்
முடியும் உன்னை
மறந்தும் வாழ என்னாலும்
என் பலகினத்தை நான் பாதையின்
படியாக்கும் போது1!!
***************************
என்னை அவன்
புரிந்து கொள்ள
அவனுக்கு தேவைப்பட்டது
இன்னுமோர் உறவு.....
***************************
துயரத்தில் என் உருவம்
பல கோணத்தைக் காட்ட
அதைப் பார்த்த விம்பம்
அழுகின்றது தனியே..
**********************
உறவே உன்மொழி மெளனம்
என் மொழி வேதனைநம் மொழி என்ன?
************************
உன்னேடும் என்னேடும்
வாழும் சில கால சொந்தம்
உன்னையும் என்னையும்
எல்லையின்றி தொட்டு
சொல்லுது காலத்தின் பாதை
*******************************
என்ன பதில் நான் சொல்ல
வாழ வழியின்றி வாழ்ந்த
இடம் தானின்றி அகதியாய்
அயல் நாட்டில் வேலையே
வாழ்கையாய்
சின்ன சின்ன ஆசைகளை
பகிர்ந்து கொள்ள நேரமின்றி
வேக வேகமாய் தொலைந்த
வாழ்வை தேடும் முதுமையின்
கேள்விக்கு...............
*********************************
தொலைந்த வாழ்வின்
தொலையா நினைவே
ஏன் என்னை தொடராய்
தொடர்கின்றாய்?
யார் தந்தார் என்னை
உன்னிடம்! ஒரு தரம்
சொல்லி விட்டு தொடறேன்!
என் காயத்தின் வலிதெரியவர்
வார்தைக்குள் கைதியானவள் எழுந்து
காலத்தை வென்று காயத்தையாற்றிட
காரணத்தை தேடுகின்றேன் !சொல்லிவிட்டு
தொடறேன்!!!
**********************
தமிழ் என்னும் அமுதினை
திகட்டாது நான் உண்டு!
கரைந்திட்ட காலமதை
கவியென நான் வரைந்து!
வாழ்ந்திடும் நிமிடங்களை
உனக்காய் தந்து! உன்னோடு
வாழும் நிமிடங்களை நான்
ரசித்து! இருப்பேன் என்றும்
உன் தமிழாய்......
****************************
சரியென சரியென
சரிந்தது ஓர் சரி
சரியாய் வந்து போக!
இது சரியானதால்
சரியில்லா சரியை
சரிசெய்து சரிசெய்து
சரியாகுது இங்கே!
ஓர் சரி சரியோடு சரி சேர்ந்து!
இது சரியில்லை சரியில்லை
எனச் சொல்லி சாய்ந்தது தோல்களில்
*******************
கல்லறை மலரென்று
கன்னிப் பருவத்தில்
தொலைத்திட்ட நாளை
காயங்களால் கரைந்து
கற்பனையோடு கனவைத் தேடி
மெளனத்தின் நினைவோடு
கரைக்கின்றது! காயங்கள்
தந்தவர் காயமின்றி சிரிந்திடும்
இன்ப நாளை பார்த்திட.........
தன் இதயத்தின் வலியை
தன்னுள் அடக்கிக்யபடி !!
வாழ வழியின்றி வாழ்ந்த
இடம் தானின்றி அகதியாய்
அயல் நாட்டில் வேலையே
வாழ்கையாய்
சின்ன சின்ன ஆசைகளை
பகிர்ந்து கொள்ள நேரமின்றி
வேக வேகமாய் தொலைந்த
வாழ்வை தேடும் முதுமையின்
கேள்விக்கு...............
*********************************
தொலைந்த வாழ்வின்
தொலையா நினைவே
ஏன் என்னை தொடராய்
தொடர்கின்றாய்?
யார் தந்தார் என்னை
உன்னிடம்! ஒரு தரம்
சொல்லி விட்டு தொடறேன்!
என் காயத்தின் வலிதெரியவர்
வார்தைக்குள் கைதியானவள் எழுந்து
காலத்தை வென்று காயத்தையாற்றிட
காரணத்தை தேடுகின்றேன் !சொல்லிவிட்டு
தொடறேன்!!!
**********************
தமிழ் என்னும் அமுதினை
திகட்டாது நான் உண்டு!
கரைந்திட்ட காலமதை
கவியென நான் வரைந்து!
வாழ்ந்திடும் நிமிடங்களை
உனக்காய் தந்து! உன்னோடு
வாழும் நிமிடங்களை நான்
ரசித்து! இருப்பேன் என்றும்
உன் தமிழாய்......
****************************
சரியென சரியென
சரிந்தது ஓர் சரி
சரியாய் வந்து போக!
இது சரியானதால்
சரியில்லா சரியை
சரிசெய்து சரிசெய்து
சரியாகுது இங்கே!
ஓர் சரி சரியோடு சரி சேர்ந்து!
இது சரியில்லை சரியில்லை
எனச் சொல்லி சாய்ந்தது தோல்களில்
*******************
கல்லறை மலரென்று
கன்னிப் பருவத்தில்
தொலைத்திட்ட நாளை
காயங்களால் கரைந்து
கற்பனையோடு கனவைத் தேடி
மெளனத்தின் நினைவோடு
கரைக்கின்றது! காயங்கள்
தந்தவர் காயமின்றி சிரிந்திடும்
இன்ப நாளை பார்த்திட.........
தன் இதயத்தின் வலியை
தன்னுள் அடக்கிக்யபடி !!
**********************
தமிழ் அழகு கவியழகு
கற்பனைக்குள் வாழ்வதும் அழகு!
எல்லா அழகிலும்
உங்களுடன்
சேர்ந்திடும் அழகை
தந்திடும்அழகு
எப்போதும் அழகு...
தமிழ் அழகு கவியழகு
கற்பனைக்குள் வாழ்வதும் அழகு!
எல்லா அழகிலும்
உங்களுடன்
சேர்ந்திடும் அழகை
தந்திடும்அழகு
எப்போதும் அழகு...
********************
என்னுள் ஏதே வேதனை
தெரியா வலி தர
தனிமை தேடினேன்
ஏனெனத் தெரியாமல்
ஆனால்.....
இசையின் அணைப்பில்
இசைக்கொரு கைதியாகி
இன்னும் நான் உயிரோடு....
தெரியா வலி தர
தனிமை தேடினேன்
ஏனெனத் தெரியாமல்
ஆனால்.....
இசையின் அணைப்பில்
இசைக்கொரு கைதியாகி
இன்னும் நான் உயிரோடு....
***************************
மெளனங்களோடு
வாழும் நாட்கள்
ஞாபங்களோடு கழிந்திடும்
நிமிடங்கள்
ஏக்கம் கொண்டு தேடிடும்
வாழ்கை வழிதெரியப் பாதையில்
வழிதேடுது கண்ணீர்துளிஎன்றும்.......
*********************************
கண்களை மூடினேன்
கனவில் நீ வந்தாய்
விழிகளைத் திறந்தேன்
வேதனைகள் எனைமூட..
**************************
பெரும் பாவம் சுமக்கும
என் அன்பே! உன் பாவம்
சுமக்க நான் வந்தேன்
தேய்பிறையாய் தேயாது
வளர்பிறையாய் வந்து விடு
இனிய உதயம் காண்போம்
என் நாளும்.....
*****************************
ஒழிந்திருப்பதை நீ கண்டு
ஒழித்தேன் போனாய்
ஒழிந்தவள் தெரியாது
ஒழித்து போனவனே
ஒழிந்தவள் உள்ளம்
கண்டுவா? ஒருவழிப் பாதை
கனவுகள் சுமக்கும் பெண்ணென்றால்......
Subscribe to:
Comments (Atom)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



















