இதுவரை தனியாக
பூட்டிக்கொண்ட என் கனவுகள்
இன்னும் யாருக்கும் புரியாமலே
சிறைப்பட்டு கிடக்கின்றது
யாரும் புரிந்துகொள்ளா
உணர்வுகள் போல்
வெறுப்புகளும் வலிகளும்
தத்தெடுத்த குழந்தையை போல்
உறவுகள் இருந்தும்
அனாதையாய் கிடக்கின்றது
தனியாய்
உரிமையற்று மடிந்த உடலை
பார்த்து தவிக்கும் உயிர்போல்
இவளும் இவள் கனவுகளும் என்றுமே
தனியாகவே கூடு விட்டுபறக்கும்வரை
வாழும்!!!
No comments:
Post a Comment