Monday, 30 December 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

கைகாட்டி சென்ற வருடமே
 என்னில்கொண்டகோபத்தால்
நீ தந்திட்டு சென்ற ஏமாற்றங்கள்
என்னுள் ஆழமாய் இருந்தாலும்
வரபோகும் வருடமே
 நீ கொண்டுவரும்ஏமாற்றங்களை
 எதிர்த்து போரிடக்காத்திருக்கின்றேன்
 உன்னை வரவேற்று!!

Thursday, 26 December 2013

குட்டிக்குட்டிச்சாரல்............



என்னிடத்தில் கண்டதெல்லாம்
உன்னிடத்தில் தோன்றியதே
இன்று உன்னிடத்தில் அழிந்தால்
எனக்குள்ளும் அழித்திட்டது
என்னிடத்தில் தேடாது உன்னிடதில்
தேடிப்பார் திரும்பக்கிடைக்கின்றதாஎன்று!!!!

Wednesday, 25 December 2013

குட்டிக்குட்டிச்சாரல்........

என்னை அறுத்து
உன்னை எடுத்து
உரியவரிடம் கொடுத்து
விட்டேன்
 என்னை வெறுத்து
தனியே  சென்ற
உன்  இதயதிற்கும்
நன்றி சொல்லி விட்டேன்
நம்பிக்கையின்றி இட்ட முடிச்சை
சிக்கலாக்கி என்னை
நானே மூடிக்கொண்க்கொண்டேன்
புன்னகைத்துப் பிரிந்து என்
 கண்கள் வடித்த நீரை
வழமைபோல்!! கைகள் தொட்டு
மறைத்துக்கொண்டேன்
உன்னை பொறுத்தவரை எனி
ஆயுள்வரை நான் துரோகியாவன்.........................

Tuesday, 24 December 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

கற்பனைகளிலும் கனவுகளிலும்
தொலைத்து வீதியில் எறித்திட்ட
பெண்னை !!
ஆண்மையோ!!
நீ விடுதலையில் தேடியதால்
நான் தலை வணங்கினேன்
உன்னை !!ஆனால்
உன் பொண்மையை நீ கண்ணீரில்
தொலைத்திட்டு கற்பனையில்
வடித்திட்டதைக் கண்டு
மீண்டும் தலை குணிந்தேன்
உன்னால்!!!

Monday, 16 December 2013

கற்பனை...................

குழந்தையின் சிந்தனையானவள்
 குறும்பில் சிறந்தவள்
அன்பை யாசிப்பவள்
நல்லோரை வணங்குபவள்
தீயவரை பரிதாபமாய் பார்ப்பாள்
அனைவரையும் உறவாய்நினைப்பாள்
உண்மைக்கு தலைசாய்ப்பாள்
பொய்யுக்கு முகம் சிவப்பாள்
எதிரியாய் யாரையும் எண்ணாதவள்
பெண்மையை இகழ்வோரை
 மன்னிக்காதவள்
கோழைகளை காளைகளாய்
காண்பாள்
குட்டி ஆசைகளை ஆசைகளாய்
சுப்பாவள்
பணத்திற்காய் விலையாகதவள்
வறுமையின் உணர்வை மதிப்பவள்
 இயற்கையிடமேவாழ்வைகற்று
கொண்டாள்
ஆண்மையின் ஒழுக்கத்தையே
உயர்வாய் காண்பவள்
கோபதின் வார்த்தைக்கு ஆழம் தெரியதவள்
மலரின்  மென்மை போன்றவள்
நேசிப்பவர் திட்டினால் மட்டுமே
உதிர்ந்திடுவாள் வாழ்வில்!!!


Thursday, 12 December 2013

குட்டிக்குட்டிச்சாரல்....

என்இதயசுவர்களில்
வரையப்பட்ட
 உன் ஞாபங்கள்  என்
உதிரத்தின் உணர்வுகளில்
ஓடுவதால்
என்மரணதில்கூட
அழியாது அன்பே!!


குட்டிக்குட்டிச்சாரல்....



 என் எல்லாவானும்
அடைக்கபட்டது போல்
எனக்குள் உன் நினைவுகள்
அடைக்கபட்டு காற்றைக்கூட
செல்லாது வைத்துக்கொண்டது
சாவியயின்றி திறக்கதெரிந்திட்ட
திருடன்  என மறந்து!


குட்டிக்குட்டிச்சாரல்......

கலாச்சாரதின் மேல்
ஆடையாய் படர்ந்திருத்த
ஒழுக்கதையும்மூடநம்பிக்கையென
 எடுத்தாடினோம்!!!
அதை நம்பிய போதும்
 காப்பாற்றமறந்து விட்டு
அதைஎடுத்தபோதும்
காப்பாற்றமறத்து விட்டு
நாம் மனிதனெனபொருமை
பேசுகின்றோம்!!

Thursday, 5 December 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னைக் கண்டு என்னை
மறந்தேன் காதல் என்றாய்
இன்றுவரை தேடுகின்றேன்
உன்னில் காதலை!!
எது காதலெனப்புரியாத
கண்ணீர்த்துளியாய்!!
!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

காதல் எதுவரை
நான்னறியேன்
காமம் எதுவரை
நான்னறியேன்
வாழ்வு எதுவரை
நான்னறியேன்!!

துரோகம் இருக்கும்வரை
மனிதவாழ்வு வலியிடமே!!
உண்மை உணராதவரை
ஆணின் அழிவு பெண்ணிடமும்
பெண்ணின் அழிவு ஆணிடமும்
முடிவுரையெழுதும் வரை!!


Thursday, 21 November 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

அழுகுரலின் ஓசை என்னை
தாக்கும் போதெல்லாம்

உடைந்து சிதறுகின்றேன்
தனியாய் !! உள்ளோ ஓர்
குழதையின் அழுகுரல்
 ஒலித்துகொண்டே இருப்பதால்!!

சோகங்கள் என்னை தாக்கும்
போதெல்லாம் வெறுத்து ஓடுகின்றேன்
தனியோ ! உள்ளோ என்னை
ஓர் குழந்தை திட்டிக்கொண்டே
இருப்பதால்!

குட்டிக்குட்டிச் சாரல்......,

வலிகளை அதிகம்
பேசிய   உன்
கடமையை மறந்திடாதே
வலிகள்
வழிகளை மறைத்திடும்
ஆயும்
அதனை  நினைப்பதற்கு
ஓர் நாளை மட்டும் தேர்ந்தெடு
அதனை மறந்திட முடியாது
என்பதால்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் கண்ணீர்துளிகள்
சாதனைபடைக்கவேண்டுமா
நித்தமும் அழாதே!!
உன்னை மற்றவர் நேசிக்க
வேண்டுமா
நடிக்கக் கற்றுக்கொள்!!
உன் புன்னகை
அர்தமுள்ளதாகவேண்டுமா
புண்பட்டாலும்
 புன்னகை்க கற்றுகொள்

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் விடுதலை
நேசிக்கபட
உன்னை  தயாராக்கிகொள்
மற்றவர் நேசிக்க
அதனை யோசிக்க வை
உன்னால் உணராவிடுதலை
மற்றவரால் நேசிக்கப்படாது!!!

Monday, 18 November 2013

குட்டிக்குட்டிச்சாரல்..

பாதி உயிரான எந்தன்
உயிரில் இருந்து என்
உதிரத்ததை
உன் எழுத்தாணியின்
மைதுளியாய் அனுப்புகின்றேன்


நீ தொடர்வதற்காய்
இறுதிவரை உன்னிடம்
கிடைக்காத ஒன்று
 உன் கற்பனைகளில் வாழ்வதால்!!


Sunday, 17 November 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

கம்பன் சொல்லி
புரியா க்கண்ணின் மொழி       உன்  கண்கள்
கண்டடு புரிந்ததடா எனக்கு!!

உன்னைப் பற்றிய விழிகள்
இன்னும் பற்றியதை
பற்றிய படியே நடக்கு
என்னோடு!!
கண்ணன் கண்ட கண்ணின்மொழி
ராதை பெற்ற காதல்மொழி
இங்கே ஆனாதடா உயிராய்!!

நீதான் ...நான் ....


வசந்தை இலையுதீர்காலமாக்கியது நீ
வார்தைகளை வசப்படுத்தி
விளையடியது நீ
இயத்தின் பாசத்தை
நேசமாக்கியது  நீ
நேசத்தை நடகமாக்கியது  நீ
தேடி வந்த  இதயமதை
தொல்லையென்றது நீ
தொலைவானதும் திட்டியது நீ
தொடர்கதையெழுதியதும் நீ
தொடர்ந்ததை அறுத்ததும் நீ
அனந்தம் கொண்டதும் நீ
சந்தேகத்தை உருவாக்கியதும் நீ
விடையை கேள்வியாக்கியது  நீ
அந்த கேள்விக்கு விடைதேடுவதும் நீ
தனியாய் நடந்ததும் நீ அதையே
விரும்பி வாழ்பதும் நீ
அன்றும்  நான் நானே தான்
இன்றும் நான்  நானே தான்!!!


Saturday, 16 November 2013

குட்டிக்குட்டிச்சாரல்......

உன்னைச்சுற்றியெரு
 கூட்டம்
உன்வார்த்தைகளுக்கு
ஆமாபோட்டால்
உன்னால்
உன்னை அறிந்திடமுடியாது
 தனித்து விடப்படும் வரை
உன் தவறுகள் கூட
உனக்கு சரியாய் தோன்றும்
 நீ உன்னை அறிந்திட வேண்டுமானால்
தனித்து சிந்திப்பாய்யாக!!!

Tuesday, 12 November 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஐந்தறிவு ஐீவன்
ஒன்றையொன்று பற்றிக்கொள்ளுது
ஒன்றையாய்!! ஆறறிவு
ஐீவன் ஒன்றையொன்று
பற்றிடாது தடுமாறுது
இரட்டையாய்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,



எந்தனை மதவிகள்
உன்னால் அவதரிதத்தாலும்
ஒரு ஐீவனின் கண்ணீரோ
நாளைய உன்னை ச்சுற்றிக்கொள்ளும்



Monday, 11 November 2013

குட்டிக்குட்டிச்சாரல்

ஓர் பட்டுபுளுவின்
மரணம் பட்டுப்புடவையாது
ஆனால்!!இங்கே
ஓர் பட்டுபுடவை
தீக்குளிக்க காத்திருக்கு
அவளின் மரணத்திற்காய்!!!

Thursday, 7 November 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,




உடைந்திட்ட மனசில்
சிதைந்திட்ட உன் முகம்
இன்னும் அழிந்திடாது
அங்கங்கே மறைந்து
மறைந்து  தோன்றுது
 உன்னைப்போல்.............

Wednesday, 6 November 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் ஆன்மாவின்
உயிர்வேரில்  உன்
உயிர் இணைந்தால் தானோ!!

எல்லா ப்பிறவியிலும்
உன் நினைவுகளை
புறத்தால் அறிந்து
அகத்தால்  மலர்கின்றது
இந்த அல்லிமலர்!!

என் ஆன்மாவின் உயிர் வேரை
எங்கே தேடி உன்னையும்
என்னையும் பிரித்திட சொல்!!

Tuesday, 5 November 2013

குட்டிக்குட்டிச்சாரல்...........



நான்தொலைக்க தொலைக்க
  நீஅதைபற்றிகொண்டாய்
    நான் தொலைத்து கொண்
 இருந்தேன் நீ   பற்றுவதால்
நீ என்னை மறந்து விட்டாய்
என்னிடம் தொலைக்கவும் ஏதுகுமில்லை
என்றபோது புரிந்தது உன்
நேசங்கள் என்தொலைப்பில் இருந்தது


Monday, 4 November 2013

குட்டிக்குட்டிச்சாரல்......,

இருஇதயஉணர்வில்
ஒருஉணர்வு உதயமானால்
சுகம்



ஒரு இதயத்தின் உணர்வு
இரு இதயத்தின் உணர்வில்
உதயமானால்  அது சுமை

Sunday, 3 November 2013

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இருள்ளிற்றி ஓளிதேடி
இருளான வாழ்வை
ஒளியின்றி வாழக்கற்று
கொண்டேன் ஒளியே 
நீ வேண்டாம்!!
உயிரான உடலிருந்தும்
வலியான இதயதின்
ஓளிதேடி உறவாடி 
உயிரற்ற உடலாகி
 வலிதாங்கி
வாழக்கற்றுக்கொண்டேன்
வலிபோக்க ஓளியோ 
நீ வேண்டாம்!!
உறவிருந்தும் உடனிருந்தும்
உறவாகா தனிமைக்கு ஓளிதேடி
அலைமோதி அறிவின்றி
அகதியான தனிமைக்குதுணையாக 
நான் வாழக்கற்றுக்கொண்டேன்!!
 ஓளியோ நீ வேண்டாம்!!
கல்லறைகதவிற்கும்
கருவறைகதவிற்கும்
உள்ளோயே நானானோன்
எனி ஒளியோ நீ வேண்டாம்!!!


Saturday, 26 October 2013

மின்மினி..........


புன்னகைப்பூவென்று
பூத்திட்ட நாளின்று
கண்ணைகட்டிவிட்டு
கணலாய் மறைத்திட்டநாளின்று
தேடிஅழைத்திட்ட இதயமென்று
திரும்பி பார்க்கும் நாளின்று
பாசம்கொண்டு பாசம் தொலைத்து
ஏக்கம் கொண்ட நாளின்று
இருந்தும் இல்லையென்னும்
வெறுமையான நாளின்று
காத்துத் காத்துத்
என்னைத்தொலைத்தநாளின்று
எல்லாம் அறிந்தாலும்
அறிவு பேசா நாளின்று
மனசின் உணர்விற்குள்
பட்டாம்பூச்சி சிறகானநாளின்று
விடை தேடி விடை தேடி தேல்வி
கண்ட நாளின்று..................

குட்டிக்குட்டிச் சாரல்......,

நான்  எரித்த
என் நாட்களை
நீ எப்படி தேடுவாய்!!

உன்னாலே  வந்து
உன்னாலே அழிந்த
என் சந்தோஷத்தை போல்
இதையும் எண்ணித்தேடாதே !!

 நீ மறந்து நீ மறைத்து
  நீ  விளையாட
 பொம்மையல்லபெண்மை!!!

Thursday, 24 October 2013

குட்டிக்குட்டிச்சாரல்......,

காதல் பொக்கிஷத்தை
காப்பாற்றிடத்தெரிந்தவனே
 வாழ்கைப் பொக்கிஷத்தை
அழகாய் திறக்கின்றன்!!

காதல் பொக்கிஷத்தை
தொலைத்தவன்
வாழ்வைக்கை பொக்கிஷம்
சுமையென பிதட்டுகின்றான்!

பருவங்கள் சொல்லும்
உணர்ச்சியால்யெழுவது காதல் அல்ல!!1



குட்டிக்குட்டிச்சாரல்......,


உன்
அன்னையை  நீ
                                                                  உண்மையாய்
நேசிப்பாய்  என்றால்
உன்
அன்னை போன்ற
 பெண்ணின் கண்ணீருக்கு
காரணமாய் இருக்கமாட்டாய்

Wednesday, 23 October 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

துயரப்புதைகுழிக்குள்
விழுந்திட்ட என்மீது
பாறாங்கல்லை போட்டு
உயிரோடு கொன்றுவிட்டாய்!!
 நான் அன்பை நேசித்தால்
இறந்தும் யாசக்கின்றேன்
உன்னை !!
கரைசேர்ப்பாய் என்பால் அல்ல
கருணைகொண்டமனம் வலிகண்டும்
உன்னையோ யோசிப்பதால்

தமிழ்........

இனிமைக்கு பொருளானது
இயற்கைக்கு எழிலானது
மண்ணுக்கு உயிரானது
வறுமைக்கு உழைப்பானது
தாழ்வுக்கு உயர்வானது
பெண்ணிற்கு காப்பானது
பண்புக்குசிறப்பானது
பண்பாட்டுக்கு அழகானது
பண்ணுக்கு சுருதியானது
மொழிகளுக்குள் சிறப்பானது
                                          சிறப்பானது
சிதையாதது கருவியானது
கருத்தானது  மனிதனுக்கு மொழியாது
தோப்பானது செழிப்பானது
ஏடானது எழுத்தானது இருந்தும்
சிறந்திட முடியாது தவிக்குது
தலைசாய்க்குது தடையாகுது
இயல்பிழக்குது வாய்பேச்சில்
வீரமாகுது வையத்திடம்
வழிவு தேடுது....
                               வழிதேடு வழிந்தோடு
தலைநிமிர்த்திடவோ போராடுது
எட்டிபார்ப்பவனுக்கும்
இனிமை சுவைகொடுக்குது
எட்டியே  உதைப்பவனுக்கும்
  எடுத்து உணவுகொடுக்குது
எண்ணிலா பல்சுவைகொடுக்குது
அன்னியரும் பயின்றிடவோ
விருச்சமாய் நிக்குது............

Tuesday, 22 October 2013

மோதியுடைந்தன கனவு......

 என் நினைவுகளில் என்னை நீ
 துரத்துகின்றாய்
என் நியங்களில் என்னை நீ
விரட்டுகின்றாய்
என் கனவுகளில் என்னோடு நீ
கனிவாய்பேசுகின்றாய்
என்னைக் கண்டவுடன் நீ
 திரும்பிபோகின்றாய்
என் பொய்களில் நீ
அழகாய்சிரிக்கின்றாய்
என்னோடு உண்மையில்
நீ கோவமாய் பார்க்கின்றாய்
நான் உறங்கியபின் நீ
தாலாட்டு பாடுகின்றாய்
நான் விழித்திருக்க நீ
திட்டிஓடுகின்றாய்
எதை எதையோதேடுகின்றாய்
என் எண்ணங்களை நீ
ஒழித்து விளையாடுகின்றாய்
 நான் இல்லையென்றால் நீ
அன்பாய் இருக்கின்றாய்
நான் அருகே வந்து விட்டால் நீ
ஏனே வெறுப்பாய் தோன்றுகின்றாய்
என்னை நீ நேசிப்பதாய் எண்ணியது
தப்பேயென உணர்கின்றேன் இப்போது!!!
காலம் கடந்தாலும் கனிந்தமனம்
கனிந்ததவோ!!!!!!

Monday, 21 October 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

எழுதுகோலில் உள்ள மை
எழுதி முடியும்வரை
எழுந்து பேசு எழுத்தாணி
கூராயாய்

                                                                    பெண்ணியம்!!

சரிநிகர்..............


ஆண்மைக்கு பெண்மையின்
தேவை சிலநிமிடம்
ஆயுளுக்கும் சித்திரவதை
அதுவோ அவளுக்கு
தேவையற்ற  சிந்தனைகளை
தேடிசொல்பவர்கள்
தேடிப்பலகதை  தேவையற்று
படித்தாலும் தேடிசொல்வதெல்லாம்
பெண்ணே நீ தேவையற்ற ஆயுதம்!!!
காவிதரித்தாலும் காடசென்றாலும்
ஆவியோ பிரிந்தாலும்
அருகிலோ ஆறுதலாய் நாலுவார்தைக்காய்
தேடிபார்பாதுவும்
தேவையற்ற பெண்ணிவளோ
கூடி கூத்தாடி கும்மிகொட்டி
ஆடிப்பாடி முடித்து சொல்வதெல்லாம்
பெண்ணே நீ தேவையற்றவள்!!

குட்டிக்குட்டிச்சாரல்......,


நீ பெண்ணாய் இந்த
மண்ணில் ஏன் பிறந்தாய்!!


நீ மண்ணாய் இருந்திருந்தால்
 சண்டையிட்டு காத்திருப்பார்
 உன்னை!!

நீ  கல்லாய் இருந்திருந்தால்
சாமியென்று கையெடுத்து தெழுதிருப்பார்
 உன்னை!!

நீ பெண்ணாய் பிறந்து விட்டாயே
இந்த மண்ணில்!!!உன்னை
பெண்ணே காத்திடுவாரோ  மண்ணில்!!

ஆரம்பம்,,,,,,,,,,,,,,,,,,..

மலையாய் எழுந்த சோகத்தில்
மழையாய் வந்தகண்ணீர் துளியில்
விதையாய் விழுந்த கரு
தளிராய் பற்றியது கரம்!

உளியாய் எழுந்து ஓவியமாய்
செதுக்கி தனியாய் நின்று
புயலாய் களைந்தது சிக்களை!!

பசியும் சொல்லாது பருவமும் மாறாது
 துணிவாய்  நடந்து தோழனாய் சிவந்து
தாய் காத்தது  முள்ளாய் மாறி!!

தனயனாய் தோல்கொடுத்து
தவிப்புகள் மறைத்து  தனியோ வலிபொறுத்து
தாயுக்கு கொடுத்தது வருடங்களாய்
தொலைந்த சந்தேசத்தின் முதல் புன்னகை!!

Saturday, 12 October 2013

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மண்ணில் பெண்ணாய் பிறந்திடும்
பாக்கியத்தை மண்ணிற்கே
சொன்னவளோ!!
சொர்க்கமும் நரகமும்
தனக்குள் உண்டெனெ பெண்ணிற்கு
புரிந்திட செய்தவளோ!!
இன்பத்தையும் துன்னத்தையும்
சமமாய் காட்டியவளோ!!
அன்னையாய் அன்னைக்கு
தந்துவம் கொடுத்தவளோ!!
அரக்கரையும் அதிகாரம்
செய்ய கற்றுகொடுத்தவளோ!!
அவதரஆண்மைக்கும்
அரியணைகாத்திட உறுதியாய்
பொண்ணை மாற்றியவளோ!!
உண்டென ஆயிரம்
நம்மைகள் செய்தோரையும் இல்லையென  ஆயிரம்
தீமைகள் செய்வோரையும்
இல்லையென்ற உறவிற்க்குள்
இருக்கு என்ற உறவால் உயிரில் 
மாயம் செய்தவளே!!
அன்பால்  
அன்பையாளக்கற்றுக்கொடுத்தவளே
கருணையான மனதினை
பெண்ணாய் வடித்தவளோ
துஸ்ரரையும் காத்திடும்
வழியை காட்டியவளோ
பாவிக்கும் அடைக்கலம்
கொடுப்பவளோ உன்னால்
என்னால் வாழும் வாழ்வை
மண்ணில் தொலைதவர் கோடியாகி
போனதம்மா ஏன்........

Monday, 7 October 2013

குட்டிக்குட்டிச்சாரல்......,

வேதனைகளை  பரிசாய்
தந்தாய் புன்னகைதந்து
ஏற்றுகொண்டேன் மீண்டும்
மீண்டும் வேதனைகளோ
சுமக்க சொல்கின்றாயோ
ஏன்
என்னை சுமைதாங்கியாய்
படைத்தாலா

Saturday, 5 October 2013

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்.........

இறைவா!!
என்னைத்திட்டியே  நல்லவர் 
ஆனவரை 
உன்னிடம் தந்துவிட்டேன்!
என்னை ஏமாற்றியே 
சிறந்தவராய்  ஆனவரை 
உன்னிடம் தந்துவிட்டேன்!
என்னை சந்தேகபட்டே 
உத்தமராய்  ஆனவரை 
உன்னிடம் தந்துவிட்டேன்!
என் நட்பால் காரியம் பெற்று 
என்னை மறத்தவரை
உன்னிடம் தந்து விட்டேன்!
என் கண்ணீரை ரசித்து 
கதைகள் சொன்னவரை 
உன்னிடம் தந்துவிட்டேன்!
என்னை அசிங்கமென்று 
அழகிற்கு பொய்யானவரை  
உன்னிடம் தந்துவிட்டேன்!
எனக்காக செய்ததாய் செல்லி
எதையும் செய்தவரையும்
உன்னிடம் தந்துவிட்டேன்!
என்னை கண்டு புன்னகைத்து
புறம் பேசுபவரையும்
உன்னிடம் தந்து விட்டேன்!
என்னை என் இதயசுவருக்குள் 
ஆணியால்அடித்தவரை
உன்னிடம் தந்து விட்டேன்!
என்னை எதிரியாய் எண்ணி
என்னையே பலிவாங்கியவரை
உன்னிடம் தந்து விட்டேன்!
என்னைஅன்பால் ஏமாளியாக்கி
தன்னை  திறமையாளார்  என்றவரையும் 
உன்னிடம் தந்து விட்டேன்!
இத்தனை மனிதரை தந்தால்
உன்னைவிட்டு நான் சென்றேன்
அவர்களை நீகாக்கவோ!!
ஆனால் நீயோ 
எதையோ எனக்கு சொல்ல
என்னை தேடித்தேடிவருகின்றாய்
இப்போது!!! 
மனிதனையும் புரியவில்லை
உன்னையும் புரியவில்லை


Thursday, 3 October 2013

குட்டிக்குட்டிச்சாரல்......,

ஊமைகில்லா  மொழியில்
வார்த்தை சொல்வது
சங்கீதம்
 அலைக்கில்லாமொழியில்
 ஓசை சொல்வது
சங்கீதம்
அறுவிக்கில்லா பாதையில்
சத்தம் சொல்வது
சங்கீதம்
பறவைக்கில்லா பாசையில்
சிறகு சொல்வது
 சங்கீதம்
என்னோடு உனகில்லா
உணர்வில் கண்ணீர்
சொல்வதும்
சங்கீதம்

நீ உணர்வா இல்லை மயக்கமா !!!

காதலே நீ
எங்கே  இருக்கின்றாய்!!
எதை!!
 இந்த மனிதன் காதலெங்கின்றான்
புரியாத உள்ளம் ஒன்று
தெரியாது தேட!!
அழகான உருவம் கண்டு
கண்கள் தொடுப்பது காதல்!!
தெரியா உள்ளதை அறியாத
உருவங்கள் மாற்றுவதுகாதல்!!
புரியாத மொழியிலும் மொளனமாய்
தேன்றுவது காதல்
அப்பாவி உருவத்திற்கும்
அடிதடி உருவத்திற்கும்
நம்பிக்கை கொடுப்பது காதல்!!
அப்ப வழிமாறி தடமாறி
 வருவது என்னவென்றேன்!!
அதுகும் காதலென்றனர்
இதுவென்ன குழப்பம் காதல்
உண்மையா பொய்ய  என வந்தது
சிந்தனை வழியோரம்
வழிமாற ஞானி
சிரியாது கூறினார்
காமத்தை வென்றிடமனிதன்
உணர்விற்கு கொடுத்தமொழி
காதல் இதை  காதலென்று
எண்ணாதே !!தொடங்காது முடியாது
அழியாது காதல் மண்ணுக்கும்
விண்ணுக்கும் சொந்தம் பெண்ணே
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்
சேராது தவிக்கு  ஒர் நேசம்
இந்த  உணர்வுக்குள் தோற்குதம்மா
கலியுலகம்!!!!

Thursday, 26 September 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

சொர்க்கத்தில் அடிகப்படாத
பத்திரிக்கை நம் காதல்
யார்யாரையோ குற்றவாளியாக்கி
நம்மை தேடுது தொலைந்தபின்பும்!!!


Thursday, 12 September 2013

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பட்டும்  விழுந்திடா

பட்டா மரத்தை சுறாவழி 
உரித்தெறிந்த உதிரத்தில்
 சிக்கிய வையமும்
உரமாகி விழுந்தெழுந்து
விழுதாகி மண்ணிலிருந்து
சுற்றிபடர்கின்றது  பட்டமரத்தை !!
தலைசாய்த்த
மரம்  உடையாது
ஒடியாது நிக்கின்றது உணர்வற்று
போனாலும்!!! வற்றிய குளத்தில்
பற்றிடா பசுமைபோல்!!
விழுதாகி தளிராகி 
தலைநிமிர்ந்த வோர்களுக்காய்!!






Saturday, 24 August 2013

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

எடுத்து நடந்து
 எந்தனிக்கமுடியவில்லை
எவரிருந்தும் எந்தவலியும்
போகவில்லை
படுத்துறங்கிட கண்களும்
பழகவில்ல
துரத்திவரும் துயரங்களும்
நிற்கவில்லை
ஓடியுழைத்தும் சங்கடம்
தீரவில்லை
அம்மா அப்பா கண்ணீருக்கும்
அர்தம்புரியவில்லை
தனிமை சுட்டாலும்
சிக்கல்கள் விலகவில்லை
நோவே வந்தாலும்
ஆறுதல்சொல்வாரில்லை
புரண்டு சுழலும் நாவிற்குள்
விழுந்த காயம்ஆறவில்லை
நடக்கும் பாதைவழி
முற்கள் மறையவில்லை
இருக்கஇருக்க
கொடுமையும்மாறவில்லை
இன்னும் இன்னும் கூட்டிக்கூட்டி
சுமையை ய் வாழ்வதற்கு இந்த
கூட்டுதான் எதற்கு இறைவா!!

Thursday, 22 August 2013

லொள்ளுக்கவிதைகள்

இலட்சியம் கொணடவன்
காதலி மாற்றம் தேடி
வாழ்வில் ஏக்கத்தோடு
காலகாலம் அவனுக்காய்
காத்திருக்க!!

வறுமைக்காதலன் காதலி
தடைகள் கண்டு ஏக்கம்கொண்டு
அன்புகாதலால் தாய்மைதொட்டு
பாட்டிக்கால மாற்றத்தில்
தொலைகின்றாள்!!!


Sunday, 18 August 2013

பொம்மை!!ஆ

இல்லாதவள்  உன் நினைவில்
இல்லாமலே உன்னுள்
உறைந்தவள் !
நீ எண்ணாதவள் என்றுமே
உனக்கானவள் ! உன்
தேவையானவள் !
மொளனமானவள்
நீ காத்திடாதவள்
கண்ணீரானவள் உன்
கடமையானவள் உன்னேடுஅழகானவள்!
 நீ சுமக்காதவள் உன்
உறவானவள் !!
உரிமையற்றவள் உன்
உயிரானவள்
உண்மையானவள் நீ தொலைத்த
நொடியானவள்!!
வலிமையானவள் உன்
மகிழ்வானவள் நீதேடித்
தொலைத்தவள்
தொல்லையானவள் உன்
வெறுப்பற்றவள் நீ சேர்த்திடாதவள்
தனியானவள்!!


Saturday, 27 July 2013

துறல்-------------

மெல்லிடைவாட
நினைவிடை சாய்ந்தாட
மனதிடையில் சில்லென்று
துறல் போட
வில்லென சாயம்
வந்து  நீயோ மின்ன
கனவின்றி நினைவின்றி
பித்தென பிடித்திட்ட
உன் காதல் சற்றென
குறைந்தாலும் பற்றென
பற்றி தொட்டணைத்து
தோல்சாய்த்து விட்ப்பிரியாது
உயிருக்குள்  நனைக்கின்றது!!
மலர்கின்றது!! ’’கைபிடித்து
நடக்கின்றது!! தவிக்கின்றது!!
நீ !!என் அருகில் இல்லாதபோதும்
இது தான் காதலா!!!


Tuesday, 23 July 2013

மாயக்கண்ணாடி

அநீதியின் பக்கள்களில்
எழுபட்ட  உயிர்களின்
இரத்தின் சுவடுகள்
வரைத்திட்ட ஓவியம்
தமிழன்!!
அடிமைசங்களியில்
தொடுக்கபடும் சரித்திரகொக்கிகளாய்
உலகம் எமக்காய் உருவாக்கியது
ஏமாற்றுச்சிறை !!
தெரிந்தும்தெரியாமலும் இன்னும்
தமிழன் நாதியற்ற பக்கங்களிலே
தேடுகின்றன் !!
உரிமையேடுகளை மாற்றத்தேடிதேடி
தொலைவது  தன்னையோ
எண்ணிய தழிழனின் சுயநலபக்கங்களோ!!
மண்டியிட்டு மண்றாடி எழுந்திட்டு
போராடி இன்னும் தோற்றதன்
வலிகளோ தமிழன் தன்னையே
தொலைத்திட்ட வெற்று பக்களில்!!!
இரத்தசுவடுகளில் காண வழியின்
சரித்திரமே மோதிமோதி ஆண்டுகள்
தொலைத்திட்டோம் ஆனாலும் விடுதலை
சிறையில் அடைபட்டே கிடக்கின்றது
ஏன் !!இன்னும் சுயநலவாதிகளின்
கைகளிலே நாதியின்றி வாசம்
செய்வதால்!உடைந்திடும்
போது உலகே அழியும் எம் விடுதலையால்!!!
மாற்றிட உண்மை மாண்டவரின் 
அழுகுரல் சத்தியம்!!!!