Tuesday 22 October 2013

மோதியுடைந்தன கனவு......

 என் நினைவுகளில் என்னை நீ
 துரத்துகின்றாய்
என் நியங்களில் என்னை நீ
விரட்டுகின்றாய்
என் கனவுகளில் என்னோடு நீ
கனிவாய்பேசுகின்றாய்
என்னைக் கண்டவுடன் நீ
 திரும்பிபோகின்றாய்
என் பொய்களில் நீ
அழகாய்சிரிக்கின்றாய்
என்னோடு உண்மையில்
நீ கோவமாய் பார்க்கின்றாய்
நான் உறங்கியபின் நீ
தாலாட்டு பாடுகின்றாய்
நான் விழித்திருக்க நீ
திட்டிஓடுகின்றாய்
எதை எதையோதேடுகின்றாய்
என் எண்ணங்களை நீ
ஒழித்து விளையாடுகின்றாய்
 நான் இல்லையென்றால் நீ
அன்பாய் இருக்கின்றாய்
நான் அருகே வந்து விட்டால் நீ
ஏனே வெறுப்பாய் தோன்றுகின்றாய்
என்னை நீ நேசிப்பதாய் எண்ணியது
தப்பேயென உணர்கின்றேன் இப்போது!!!
காலம் கடந்தாலும் கனிந்தமனம்
கனிந்ததவோ!!!!!!

No comments: