Saturday, 5 October 2013

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்.........

இறைவா!!
என்னைத்திட்டியே  நல்லவர் 
ஆனவரை 
உன்னிடம் தந்துவிட்டேன்!
என்னை ஏமாற்றியே 
சிறந்தவராய்  ஆனவரை 
உன்னிடம் தந்துவிட்டேன்!
என்னை சந்தேகபட்டே 
உத்தமராய்  ஆனவரை 
உன்னிடம் தந்துவிட்டேன்!
என் நட்பால் காரியம் பெற்று 
என்னை மறத்தவரை
உன்னிடம் தந்து விட்டேன்!
என் கண்ணீரை ரசித்து 
கதைகள் சொன்னவரை 
உன்னிடம் தந்துவிட்டேன்!
என்னை அசிங்கமென்று 
அழகிற்கு பொய்யானவரை  
உன்னிடம் தந்துவிட்டேன்!
எனக்காக செய்ததாய் செல்லி
எதையும் செய்தவரையும்
உன்னிடம் தந்துவிட்டேன்!
என்னை கண்டு புன்னகைத்து
புறம் பேசுபவரையும்
உன்னிடம் தந்து விட்டேன்!
என்னை என் இதயசுவருக்குள் 
ஆணியால்அடித்தவரை
உன்னிடம் தந்து விட்டேன்!
என்னை எதிரியாய் எண்ணி
என்னையே பலிவாங்கியவரை
உன்னிடம் தந்து விட்டேன்!
என்னைஅன்பால் ஏமாளியாக்கி
தன்னை  திறமையாளார்  என்றவரையும் 
உன்னிடம் தந்து விட்டேன்!
இத்தனை மனிதரை தந்தால்
உன்னைவிட்டு நான் சென்றேன்
அவர்களை நீகாக்கவோ!!
ஆனால் நீயோ 
எதையோ எனக்கு சொல்ல
என்னை தேடித்தேடிவருகின்றாய்
இப்போது!!! 
மனிதனையும் புரியவில்லை
உன்னையும் புரியவில்லை


No comments: