Saturday, 12 October 2013

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மண்ணில் பெண்ணாய் பிறந்திடும்
பாக்கியத்தை மண்ணிற்கே
சொன்னவளோ!!
சொர்க்கமும் நரகமும்
தனக்குள் உண்டெனெ பெண்ணிற்கு
புரிந்திட செய்தவளோ!!
இன்பத்தையும் துன்னத்தையும்
சமமாய் காட்டியவளோ!!
அன்னையாய் அன்னைக்கு
தந்துவம் கொடுத்தவளோ!!
அரக்கரையும் அதிகாரம்
செய்ய கற்றுகொடுத்தவளோ!!
அவதரஆண்மைக்கும்
அரியணைகாத்திட உறுதியாய்
பொண்ணை மாற்றியவளோ!!
உண்டென ஆயிரம்
நம்மைகள் செய்தோரையும் இல்லையென  ஆயிரம்
தீமைகள் செய்வோரையும்
இல்லையென்ற உறவிற்க்குள்
இருக்கு என்ற உறவால் உயிரில் 
மாயம் செய்தவளே!!
அன்பால்  
அன்பையாளக்கற்றுக்கொடுத்தவளே
கருணையான மனதினை
பெண்ணாய் வடித்தவளோ
துஸ்ரரையும் காத்திடும்
வழியை காட்டியவளோ
பாவிக்கும் அடைக்கலம்
கொடுப்பவளோ உன்னால்
என்னால் வாழும் வாழ்வை
மண்ணில் தொலைதவர் கோடியாகி
போனதம்மா ஏன்........

No comments: