Monday 16 December 2013

கற்பனை...................

குழந்தையின் சிந்தனையானவள்
 குறும்பில் சிறந்தவள்
அன்பை யாசிப்பவள்
நல்லோரை வணங்குபவள்
தீயவரை பரிதாபமாய் பார்ப்பாள்
அனைவரையும் உறவாய்நினைப்பாள்
உண்மைக்கு தலைசாய்ப்பாள்
பொய்யுக்கு முகம் சிவப்பாள்
எதிரியாய் யாரையும் எண்ணாதவள்
பெண்மையை இகழ்வோரை
 மன்னிக்காதவள்
கோழைகளை காளைகளாய்
காண்பாள்
குட்டி ஆசைகளை ஆசைகளாய்
சுப்பாவள்
பணத்திற்காய் விலையாகதவள்
வறுமையின் உணர்வை மதிப்பவள்
 இயற்கையிடமேவாழ்வைகற்று
கொண்டாள்
ஆண்மையின் ஒழுக்கத்தையே
உயர்வாய் காண்பவள்
கோபதின் வார்த்தைக்கு ஆழம் தெரியதவள்
மலரின்  மென்மை போன்றவள்
நேசிப்பவர் திட்டினால் மட்டுமே
உதிர்ந்திடுவாள் வாழ்வில்!!!


No comments: