Monday 13 March 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 நம்மை பிடிக்காமல் விட்டு

சென்றவருக்கூட நம் சந்தோஷம்

ஏன் கஸ்ரத்தை கொடுக்கின்றது

நாம் சந்தோஷமாய்

இருக்க கூடாதென  ஏன் நினைக்கின்றார்

இங்கே 

கஸ்ரப்படும் போது வராத பாசம் 

நம்மை யாரேனும் நேசித்தால் மட்டும்

கோவமாகின்றதே ஏன்?

நம்மை வெறுப்பவர் மனதிலும்

நாம் நன்றாக வாழ்ந்திடக்கூடதென்ற

நல்ல எண்ணங்களா!!

தன் பிரிவு அவர் வாழ்வை

அழித்திடவேண்டும் என்ற நற்பாசமா

இற்றைவரை புரியாத ஆண்பெண்

வாழ்க்கை ஓரு யுத்தகளமே

இதில் பெரிதென்றும்  சிறிதென்றும்

சண்டையிட்டு மண்டையுடைத்து

மண்ணில் சாம்பலாகியவரே அதிகம்!!!

நேசித்து பாருங்கள் குறைகள்

காதலாகும் 

மதித்து பாருங்கள் வாழ்க்கை

வெளிச்சமாகும்  ஓற்றுக்குள் ஓன்றை

ஓழித்தவன் செய்தது தவரல்

சொர்க்கமே !!!




No comments: