Wednesday, 30 July 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்............,

 இறைவா!! ஏனடா 

நயமில்ல  கடவுளானாய் 

இல்லையென  தெரிந்தும் 

என்னை  மட்டும் 

மாட்டிவிடுகின்றாய் 

என்  பாதங்கள்  வலிக்க 

நடக்கவும்  வைக்கின்றாய் 

இல்லாத  பணத்தை 

இழக்கவும்  வைக்கின்றாய் 

என்  பெயரை  கேட்டாலே 

என்னிடம்  வாங்கியே கொடுக்க 

தோணுமா  உனக்கும்  

லஞ்சம்  கொடுத்து 

லஞ்சமாய்  செய்ய 

பணம்  இல்லாமல் 

பயணங்கள்  தடையாக 

தனிமையில் நிக்கின்றேன் 

உன்னால் !!

உருவாக்கியவன்  நீ 

இன்னும்  சில  நாட்களுக்குள் 

ஒன்று  பணத்தை  தா 

இல்லை!!

  என்  தேவையை  நிறைவேற்று !!

  கொடுப்பது  பத்தர்கள் 

வேண்டுபவன் நீ  வேண்டாமே 

உனக்கும்  பணத்திமிர் !!!


   

No comments: