Tuesday 16 November 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மனங்களைகொலைசெய்து 

மானங்களைவிற்பனை செய்து 

உடல்களை தேடும் உலகம்

இதுவா!!! 

ஆடைகளை களைந்து 

உடல்களைகற்பனை செய்து 

உயிர்களை சிதைக்கும்  உலகம்

இதுவா!!

எத்தனையே கொடுமைகளை

எவர் எவரே கடக்க

கடக்கமுடியா கொடுமைகளை 

 பெண்ணுக்குள்வைத்த இறைவன் 

செய்த  தவறின்உலகம் 

இதுவா!

பிஞ்சுவுடலும் அஞ்சி சாவுகின்றதே

கொஞ்சமும் இறக்கமில்லா

வஞ்சகர்  செயலால் 

அத்தனை கொடுமையும் 

பெண்ணையே தேடியலைய 

கருணையின்றி  போன

மனித இதயம் வாழும் உலகம் 

இதுவா!

பக்கத்தில்உறங்குவது 

யாரென தெரியமலே 

கற்பும் கதறியழகின்றது

தன்னை வைத்து 

மண்ணை படைத்த

மனிதனின் பெண்ணையென்னி

தாய்பால் சுரந்தநெஞ்சங்கள்

கல்லாய் போய்கள்ளி விதிப்பாலாய்

சுரக்கும்உலகம் இதுவா!!

கருதான்டியபெண்ணின் 

சுவைப்பால்கள்ளிபாலாகியும்

ஓரு ஆணின்  ஓழுக்கமற்ற 

தன்னம்பிக்கையற்ற  வடிவமே

பெண்ணின் மரணமென 

ஆண்புரியும்காலம்  எக்காலம் 

சந்தோஷமான 

உலகம் மலருவது  எப்போது!!!!

No comments: