Monday 9 September 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 விந்தைகளும்

விசித்திரங்களும் நிறைந்து 

விளையாடும் வாழ்க்கையெனும் 

 மைதானத்தில்

மனித உணரவுக்குள் 

பெண்மையின்  படைப்பு 

புரியா  புதிரே!

பசிக்கும் வயிறுக்கு  உணவளிக்க

மறுக்கும் மனிதன்  தான் 

எதை இழந்தும்  தன் 

உணர்வுப்பசியை   அடைகின்றான் !

இறை எழுதி முடித்த

மனிதப்புத்ததை 

எப்படி புரட்டினாலும்

பெண்மைக்கு

இறைவன் எழுதி முடித்த

அர்த்தங்கள் விசித்திரமே!!!

அவள்  கிழிந்த ஆடைக்குள் 

உள்ள  வயிறில் கூட 

வயிற்று  பசி  தெரிவதில்லை !

படைப்பின்  பிழையா ?

பிறப்பின்  பிழையா ?

இறைவனின்  பிழையா ?

அவளின்  பிழையாகும் 

வாழ்க்கை  அவள்  உயிரில் 

முடிகின்றது !!!

No comments: