விந்தைகளும்
விசித்திரங்களும் நிறைந்துவிளையாடும் வாழ்க்கையெனும்
மைதானத்தில்
மனித உணரவுக்குள்
பெண்மையின் படைப்பு
புரியா புதிரே!
பசிக்கும் வயிறுக்கு உணவளிக்க
மறுக்கும் மனிதன் தான்
எதை இழந்தும் தன்
உணர்வுப்பசியை அடைகின்றான் !
இறை எழுதி முடித்த
மனிதப்புத்ததை
எப்படி புரட்டினாலும்
பெண்மைக்கு
இறைவன் எழுதி முடித்த
அர்த்தங்கள் விசித்திரமே!!!
அவள் கிழிந்த ஆடைக்குள்
உள்ள வயிறில் கூட
வயிற்று பசி தெரிவதில்லை !
படைப்பின் பிழையா ?
பிறப்பின் பிழையா ?
இறைவனின் பிழையா ?
அவளின் பிழையாகும்
வாழ்க்கை அவள் உயிரில்
முடிகின்றது !!!
No comments:
Post a Comment