Tuesday 3 September 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அழகென்ற  சொல்லுக்கு 

அர்த்தங்கள்  இல்லாதவள் 

எதை போடடாலும்  அழகாய் 

தெரியாதவள்   



கிண்டலுக்கு கேலிக்கும்  

சொந்தமானவன் 

அழகிற்கு  பிடிக்காதவள் 

அழுகைக்கு  பிடித்தவள் 

முயன்று தோற்று  

இயலாமையால்  சிறைபிடிக்கப்பட்டவள் 

பூவினை நேசிப்பவள்  இருந்தும் 

பூவினை சூடிடத்தடையானவள் 

காதலுக்கு  சொந்தமாவாள் 

கருணையற்ற  மனிதனுக்குள் 

வாழ்கின்றாள் !!!


No comments: