Saturday 7 September 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தித்திக்கு மனசு 

உன்வாசல்  தொலைத்த 

காலமதை  மீட்டியே 

மீண்டும்    உன் 

வாசல்  வந்தபோது 

எப்படி  இப்படி 

புரியவில்லை  எனக்கும் 

என்  கைகள் பிடித்த 

மோதகம்  போல் 

என் மனசு திதிக்கு 

உன்னோடு  சண்டையிடாமல்  

உன்  பாதி  மோதகம்  

கைவந்தும்  !!மீண்டும் 

ஒரு  அழகிய  இளமைக்கலாம் 

பூக்குது   எனக்குள் 

உன்னோடு  வரைந்த 

என்  காதல்  பொய்யிலிலை 

ஆனாலும்  கைபிடித்திட 

முடியா  நீயும் 

நானும்  கனவில்லை !!1


No comments: