Tuesday 20 August 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 ஒருநொடி  ஒருபொழுது 

நானாய்  யாரேனும் 

வாழ்ந்திட  முடிந்தால் 

என்  விழிகள்  உறங்கிடா   

வலிகளின்  அர்த்தங்களை

எனக்காய்  

புரித்தேனும்   கூறலாம் !!

புரியாதவரே  இருப்பதால் 

என்னை  அறியாமலே 

பேசுகின்றனர் 

அறிந்தவர் போல் !

தெரியாததுபோல்  நானும் 

கடந்து  தான்  பார்க்கின்றேன் 

அனாலும்  முடியவில்லை 

அவர் அவர் கற்பனை 

கதைகளை !!



No comments: