என் தோல்வியில் முளைத்த
உயிர் அவன்
என் கண்ணீரை தாங்கும்
கற்பகவிருச்சம் அவன்
என் தய்மையையே
குழந்தையாய் தாங்கிடும்
குழந்தை அவன்
நான் அழுதாலும் விழுந்தாலும்
நம்பிக்கை அவன்
வளர்ந்தும் இன்னும்
குழந்தையாய் காண்கின்றேன் !!
அவன் இழந்ததை மறந்ததாய்
நடிக்கின்றான் என்னைப்போல்
தோல்சாயும் ஒரு நொடி
போதும் தாய்மைக்கு
என புரியாததால் !!!
No comments:
Post a Comment