Tuesday 20 August 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தெருவோர 

சாளரத்தின்  ஓரம் 

விழியோர  தேடலோடு 

விரல்களை பிசைந்து

கொண்டோ 

விரக்தி  பார்வையுடன் 

அவள்  எதையோ

  எதிர்பார்த்தபடி 

காத்து நிற்பது  

புரிகின்றது 



எதையென  தெரியாமல் 

பலவிழிகள்  கடக்கின்றனர் 

நிமிடங்கள்  தொலைய 

அவள்  மட்டும் 

 அசையாமல்  நிற்க 

எங்கோ  ஓர்  

மங்கள சத்தம்  கேட்க்கின்றது 

அவள் விழிகளில்  ஒரு பரவசம் 

ஏக்கத்தோடு  ஒலிக்கும் 

திசையை  அவலோடு

 பார்க்கின்றாள் 

 மெல்ல  மெல்ல  

ஒலியின்  சத்தம் 

அவள்  அருகே நகர 

கூட்டம்  அவள்  

பார்வையோடு பார்வையாக  

நடுவே  அவள்தேடிய 

அவன்  மாப்பிள்ளையாய் 

 பார்த்த  நிமிடம் 

தண்ணீர்  இல்லாமல் 

கண்கள் குளிக்க

கரணம் சொல்லாமல் 

இதயம்  அழுகின்றது 

அவன் சொன்ன வார்தைகள் 

காயப்பட்டதால் 

 அவன்  மட்டும் 

புதிய சந்தோஷத்தில் !!!

பார்க்கும்  வரை  இருந்த மனசு 

பார்த்தபின்பு  இருந்தும் 

இல்லாமல்  துடிக்க

அவள் கைகள்

 சாளரம் மூட 

கால்கள் விலகிச்சென்றது    

சாளரத்தை  விட்டு  மட்டுமல் 

அவள் வாழ்க்கையை 

விட்டும் தான் !! 

அவன்  தேடி கொடுக்கமறுத்தது 

அவளுக்கு  மறுஜென்மத்தை 

அவன்  விட்டு  சென்றது 

அவளைமட்டுமல்   

அவள் கடைசி நம்பிக்கையையும் 
!!





No comments: