Wednesday 14 August 2024

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 மாலைக்குள்   மலர்கள் 

 பூத்தது  உனக்காச்சி 

மாமா !

 வெள்ளிக்கொலுசு ஒலி 

 உன்னால் என்னைப்போல்  

 சிணுங்குது மாமா !!

தென்றலுக்குள்   என்  வாசம்  

உன்  வசமாய்  காலந்து நழுவு 

மாமா! 

 தலையணையை  அணைக்கையில் 

  கூட உன்னைபோல்  நடிக்குது  

மாமா !!

கூந்தால் பட்டு  சிதறிய நீர்

உன் நெஞ்சம் பட்டு  குளிருது 

மாமா !! விடியல் வந்து 

தூக்கம் கெடுத்து  எழும்பியோட 

சொல்லுது மாமா !!

ஆடிக்கற்று  வெப்பத்தில் 

வேர்வைத்துளி போல் 

வேண்டாமென்றாலும்  தானாய் 

பூக்குது  மாமா !!!
 



No comments: