ஓற்றையாய் நின்றாலும்
உறவை காக்கும் தைரியுண்டு
தன்னம்பிக்கையுண்டு
எட்டவே நின்றாலும்
விழுந்தவர் கைகளை
பற்றியே தூக்கிட இதயமுண்டு
அழகான அன்பிலான தாமையுமுண்டு
தற்பெருமை பேசி தனியே வாழும்
கோழைக்கு தெரியா
உறவின் தியாகம் வறுமையிலுமுண்டு
விழுந்த இடத்தில் தன்னை தொலைத்து
தனியே எழுந்தவள்
உயிராய் உறவை சுவாசிக்கின்றாள்
தன் மகிழ்சியற்ற கனலுக்குள்
உறவின் மகிழ்ச்சை
சிறைவைத்தாள் தன்னை வரைந்த
இறைவனுக்கே விசித்திரமாகின்றாள்
தன்னை காக்க தனிமைபூண்ட
மனிதனுக்கு புரியாதே போனதே
இறைவன் படைப்பபின்
உண்மைகள்!!!
No comments:
Post a Comment