ஓற்றையாய் நின்றாலும்
உறவை காக்கும் தைரியமும்
தன்னம்பிக்கையுண்டு!!!எட்டவே நின்றாலும்
விழுந்தவர் கைகளை
பற்றியே தூக்கிட இதயமும்
அன்பிலான தாமையுமுண்டு!
தற்பெருமை பேசி தனியே வாழும்
கோழைக்கு தெரியா! உறவின்
தியாகம் வறுமையிலுமுண்டு!
விழுந்த இடத்தில் தன்னை தொலைத்து
தனியே எழுந்திடவும் செய்தவள் !
உறவை !
உயிராய் சுவாசிக்கின்றாள்
தன் மகிழ்சியற்ற கனலுக்குள்
உறவின் மகிழ்ச்சியை
சிறைவைத்து !
தன்னை வரைந்த இறைவனுக்கே
விசித்திரமானவள்
தன்னை காக்க இறையின்
இறைமைகுள் தனிமைபூண்டு
மனிதனுக்கு புரியாதே போன
இறைவன் படைப்பபின்
உண்மைக்கு பொருளானால் !!!
No comments:
Post a Comment