Monday 12 January 2009

காலமே பதில்.....

கொண்டவன் வென்றவன்
கொள்கை கொள்பவன்
எம்மை அழிப்பவன்
ஆள்பவன் 
எல்லாம் காலத்தின்
விடையாய் தேடுது மனசு இன்று!!!

யாரிடம் யாரை கேட்க்க
உயிரின் உறவுகள் எங்கோ
அடுக்கடுக்காய் அழிய
ஆற்றிட துயரம் தேடியழையுது
மண்ணில் விடை தனை
பாவியர் மண்ணில் உயர்ந்திட
பாவியாய் ஆன எம்மவர் வாழ்கை
தினசரி செய்திதாளாய் பக்கத்துக்கு
பக்கமாகய் ஆராட்சி கட்டுரையில்
அவியுற்று அடுக்கடுக்காய் இறக்குது
எமக்காய்
உலகத்தின் நாடகம்
எதிரியின் வெற்றியாய் தெரிய
ஏமாற்றதால் ஏமாந்த எங்கள் இதயம்
கேட்குது காலத்திடம்!
உண்மையின் விலைக்கு நாங்கள்
ஆண்டுக்கு ஆண்டு கொடுத்த
உயிர்த் தியாகத்திற்கு பதில்
என்னவென்று ............

No comments: